Home செய்திகள் ஒட்டன்சத்திரம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியவர் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு

ஒட்டன்சத்திரம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியவர் கைது: 80 பவுன் நகைகள் மீட்பு

by mohan

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் பூட்டப்பட்டிருந்த வீடுகளில் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இந்த சம்பவங்கள் அனைத்திலும், ஒரேநபர் மட்டும் ஈடுப்பட்டு வருவது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவ இடங்களில் பதிவான கைரேகை மற்றும் சிசிடிவி கேரமாவில் பதிவாகி இருந்த நபரின் அடையாளங்களை வைத்து போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.அந்த நபர், செம்மடைப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் (55) என்பதும், ஒட்டன்சத்திரம் பகுதியில் வீடுகளில் திருடியவர் என்பதும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 80 பவுன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது திருச்சி, சேலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.ஒட்டன்சத்திரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுப்பட்ட நபர் பிடிபட்டதால் பொதுமக்களும், காவல்துறையினரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!