Home செய்திகள் பிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி

பிளாஸ்டிக் குடங்கள் தான் தமிழகத்தின் இன்றைய அடையாள குறியீடு — கனிமொழி எம்பி

by mohan

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக  சார்பில் சீராக குடிநீர் வழங்க கோரி விளாத்த்குளம் மார்க்கெட் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். பொதுகுழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகிக்தார்.

  ஆர்ப்பாட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி  தமிழக அரசுக்கு எதிராகவும், தண்ணீர் தட்டுப்பாட்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். தமிழகத்தில்காலிகுடங்களுடன் மக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. நாங்கள் தான் அரசியல் ஆக்குகிறோம் என்று அதிமுக  சொல்கிறது, இது தேர்தலுக்கான அரசியல் இல்லை என்றும், பிளாஸ்டிக் குடங்களை வைத்துக்கொண்டு மக்கள் தண்ணீருக்கு அலையும் நிலை தான் உள்ளது.தமிழகத்தின் அடையாளமாக பிளாஸ்டிக் குடங்கள் தான் குறியீடாக இருக்கிறது என்றும், தண்ணீர் பிரச்சினையில் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்,ஆனால் அரசு தண்ணீர் பிரச்சினையை. மறைக்க நினைக்கிறது, மத்திய அரசுக்கு பயந்து கேரளாவில் இருந்து தண்ணீர் பெற தமிழக அரசு மறுத்து விட்டது என்றும், இதே மெத்தனப் போக்கை கடைபிடிக்கும் என்றால் இந்த அரசை எதிர்த்து ஒரு மிகப்பெரிய போராட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் முன் எடுக்கும் என்றும்,மக்களின் உணர்வுகளை இந்த அரசுக்கு எடுத்துரைப்போம், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கொண்டுவந்த திட்டங்களை இந்த பராமரிக்கவும் இல்லை, செயல்படுத்தவும் இல்லை, ஆட்சி மாற்றம் விரைவில் ஏற்படும்.. மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க திட்டங்களை கொண்டு வருவார் என்றார்.

இதைதொடர்ந்து விளாத்திகுளம் அருகே உள்ள கத்தாளம்பட்டியில் பொது மக்கள் கோரிக்கையை ஏற்று திமுக சார்பில் லாரிகள் மூலமாக குடிநீர் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை இருக்கிறது. ஆனால் அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது,அரசுவுடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம்,தண்ணீர் பிரச்சினை கண்கூடாக தெரிகிறது.. அரசு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது,திமுக ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தவில்லை, குடிநீர் கிடைக்காத கிராமங்களுக்கு திமுக சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறோம்,எதிர் கட்சி தலைவர் கேரளா முதல்வருக்கு தண்ணீர் வழங்க கோரிக்கை வைத்தார். அவர்கள் கொடுப்பது குறைந்தளவு தண்ணீர் என்றாலும், தமிழக அரசு ஏற்க மறுத்து விட்டது, கூட்டணி குறித்து திமுக தலைவர் தெளிவான பதில் கூறுவார் என்றும்,யார், யாருக்கு பல்லாக்கு தூங்கி கொண்டு, தமிழகத்தினை கூறு போட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.. அவர்கள் பல்லாக்கு தூக்கிய காரணத்தினால் இன்றைக்கு ஒரு இடங்கிளில் கூட வெற்றி பெறமுடியாத நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!