9
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்விச்சீர் விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. கல்விச்சீர் விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு வீ.மாரிமுத்து அவர்கள் தலைமையேற்றார். தலைமையாசிரியர் திரு ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் அனைவரையும் வரவேற்றார்.
பள்ளிக்குத் தேவையான கணினி, பீரோ, மேசை, மாணவர் அமர வட்ட வடிவ மேசை, தீயணைப்பான், எலெக்ட்ரிக் பெல், டிவி மற்றும் ஸ்பீக்கர் வைப்பதற்கான கபோடு, தண்ணீர் டிரம் மற்றும் கேன், தட்டு, தம்ளர், வாளி, துடைப்பம், குப்பைக் கூடை மற்றும் மாணவர்களுக்கான எழுது அட்டை, நோட்டு, பேப்பர், பேனா போன்ற சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், கிராம்ப் பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கல்விச் சீராக வழங்கினர். அரசுப் பள்ளியின் மீது அக்கரை கொண்ட பலரும் பள்ளிக்கு தாராளமாக பொருட்கள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. கல்விச்சீர் விழா ஊர்வலம் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலமாகவும் கொண்டாடப்பட்டது. புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு கிரீடம் மற்றும் மாலை அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப் பட்டனர்.
ஊர்வலத்தில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி ச.முனீஸ்வரி மற்றும் திரு.சுப்பிரமணியன், திரு.கோபாலகிருஷ்ணன், திரு.சண்முகநாதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டு பள்ளிக்குப் பொருட்களை வழங்கினர். பள்ளி ஆசிரியர் திரு பொ.அய்யப்பன் அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் திரு ச.கிறிஸ்து ஞான வள்ளுவன் மற்றும் ஆசிரியர் திரு பொ.அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.