7
கரூர் மாவட்டம் பள்ளபட்டியிலுள்ள சாக்கடைநீர் தேங்கியுள்ள குட்டைகளில், கொசு உற்பத்தி அதிகமாகிவருகிறது., இதனால் அப்பகுதியில் வசிப்போர்களுக்கு மலேரியா, டைபாய்டு, மர்ம காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது.
இதனால் சாக்கடை குட்டைகளிலிருந்து உற்பத்தியாகும் கொசுக்களைகட்டுபடுத்த, “பள்ளபட்டி மக்கள் வாட்ஸ்ஆப் குழூ” நண்பர்கள் – மரத்தூளுடன் கழிவு ஆயில் சேர்த்து, உருளைகளாக அமைத்து, அவற்றினை சாக்கடை கழிவுநீர் குட்டையில் போட்டுள்ளார்கள். இதனால் கழிவு ஆயில் முழுவதுமாக சாக்கடைக்குட்டையில் பரவி, கொசுக்கள் உற்பத்தியை கட்டுபடுத்தபடுகிறது என்பதாக பள்ளப்பட்டி வாட்ஸ் அப் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.