7
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பஜாரில் இரும்புக் கடை நடத்தி வருபவர் ராமமூர்த்தி, 60 . இவரை அவரது கடையில் வைத்து இரு சக்கர வாகனத்தில் ஹெல்மட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சற்று முன் அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். தலை, கைகளில் படு காயமடைந்த ராமமூர்த்தி மேல்சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். நிலத்தகராறு முன் விரோதத்தால் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து கடலாடி போலீசார் விசாரிக்கின்றனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.