7
இந்திய கவுன்சில் பள்ளிகளுக்கு இடையேயான மாநில அளவிலான டென்னிஸ் போட்டி ஏறகாடு மான் போர்டு பள்ளியில் நடந்தது. இதில் ஜூனியர் பிரிவு ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் இராமநாதபுரம் .நேஷனல் அகாடமி மெட்ரிக் ICSE பள்ளி மாணவர் V. நந்தகிஷோர் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் கர்நாடகாவில் நடைபெறவுள்ள தேசிய டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றார். தேசிய போட்டியில் இரண்டாவது முறையாக பங்கேற்கச் செல்லும் மாணவர் நந்தகிஷோர், மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீரராகவ ராவிடம் வாழ்த்து பெற்றார். டென்னிஸ் பயிற்றுநர்கள் சோமசுந்தரம், ஜானி ஆகியோர் உடன் உள்ளனர்.
செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.
You must be logged in to post a comment.