இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்க்கு நேற்று (06-06-2018) மாலை ஈரோடு மாவட்டம் பெரியபாலையம் எஸ்.எஸ்.டி.நகரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் சரவணன் வயது 36, இவர் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி காளீஸ்வரி வயது 30 இருவரும் இராமேஸ்வரம் வந்திருந்தனர் .
இராமேஸ்வரத்தில் வீரபத்திரசாமி கோவில் தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் நேற்று (06-06-2018) மாலை முதல் இன்று (07-06-2018)காலை 11மணி வரை அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் கதவை திறக்குமாறு அறையில் தங்கியிருந்த சரவணனை அழைத்துள்ளார். ஆனால் அறையின் கதவு திறக்கப்படாததால் உரிமையாளர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்த ராமேஸ்வரம் காவல்துறை துனைக் கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து அறைக்கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர் அங்கு மதுவுடன் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சரவணன் தங்கியிருந்த அறையை சோதனை செய்த போது விஷ பாட்டில் மற்றும் மதுபாட்டில் இருந்தது. மேலும் அவரின் சட்டைப்பையில் இருந்த முகவரியை எடுத்த காவல்துறையினர் சரவணனின் உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதியர் பற்றி தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடலைக்கைப்பற்றி போலீசார் உடல் கூறு சோதணைக்காக இராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You must be logged in to post a comment.