இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் ஏற்றிக்கொண்டிருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பதப்படுத்தப்பட்ட கடல்அட்டை கொண்ட பத்து மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட நாட்டுபடகும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கடத்தல்காரர்களை சுங்கத்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து பதப்படுத்தப்பட்ட கடல்அட்டையை இலங்கைக்கு கடத்திச்செல்லப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சுங்கத்துறையினர் வேதாளை கடற்கரையை சுற்றிவளைத்து சோதனை செய்தபோது சந்தேகம் இடமான வகையில் நின்று கொண்டிருந்த படகை சோதனை செய்தனர், அதில் கடல்அட்டை மூடைகள் ஏற்றப்பட்டது இருந்தது தெரியவந்ததையடுத்து அந்த படகை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்ட போது அதில் 10 மூடை பதப்படுத்தப்பட்ட கடல்அட்டைகள் இருந்தது அதனை கைப்பற்றிய சுங்க துறையினர் படகையும் 10 மூடை கடல் அட்டைகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மூடைகளை சோதனை செய்தபோது அவற்றில் 500 கிலோ கடல்அட்டைகள் இருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு ரூபாய் ஒரு கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டு தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் சுங்கத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.