மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பாரிமுனை(பாரீஸ்) பஸ் நிலையம் எதிரில் உள்ள சிறுக்கடை வியாபாரிகள் 40 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 02 அன்று மாலை 4:00 மணியளவில் மாநகராட்சி அதிகாரிகள் சிறுக்கடை வியாபாரிகளிடம் தொழிற்வரி செலுத்த வேண்டும் என்று கூறி நோட்டீஸ் விநியோகித்தனர்.
நோட்டீஸ் விநியோகித்த மறுநாளான இன்று(மார்ச்.03) அதிகாலை 6 மணியளவில் எந்தவித அறிவிப்பும் இன்றி எந்தவித கால அவகாசமும் வியாபாரிகளுக்கு வழங்காமல் 50க்கும் மேற்ப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்து சென்றனர்.
இதனை அறிந்த SDPI கட்சி வர்த்தகர் அணி மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளின் இத்தகைய செயல்பாடுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் எஸ்.அமீர் ஹம்ஸா, வர்த்தகர் அணி மாநில செயலாளர் அஜ்மல் கான், வர்த்தகர் அணி மத்திய சென்னை மாவட்ட தலைவர் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
You must be logged in to post a comment.