13
கீழக்கரை அப்பா மெடிக்கல் மற்றும் சேது மெடிக்கல் சுந்தரம் கடந்த இருபது ஆண்டு காலமாக பல சமூக மேம்பாட்டு சேவைகள் செய்து வருகிறார். இவரின் சமூக சேவைக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமெரிக்காவில் உள்ள INTERNATIONAL OPEN UNIVERSITY OF HUMANITY HEALTH SCIENCE AND PEACE மற்றும் தமிழ்நாடு பத்திரிக்கை நிருபர்கள் சங்கம் இணைந்து சுந்தரம் அவர்களுக்கு, அவருடைய சமூக சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினர்.
இந்நிகழ்வு கடந்த 03/02/2018 அன்று ஒசூரில் உள்ள கிளாரஸ்டா ஹோட்டலில் நடைபெற்றது. இவ்விழாவில் நீதியரசர்கள் Dr.சீனிவாசம், Dr. சாம்சன் அவர்களின் முன்னிலையில் “DOCTOR OF SOCIAL WORKS” என்று பட்டமளிக்கப்பட்டு கௌவரவிக்கப்பட்டார்.
இவருடைய மக்கள் சேவை இன்னும் சிறப்படைய கீழை நியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
You must be logged in to post a comment.