8
முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளை முன்னிட்டு 70 நபர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே முகவூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை சட்டமன்ற உருப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார்.
கலைஞரின் 97வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்றம் சார்பில் தலைவர் முனியசாமி, துணைத் தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் இராஜபாளையம் ஒன்றிய பெருந்தலைவர் சிங்கராஜ் 70 ஏழை பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் கவுன்சிலர்கள் நவமணி , மற்றும் கட்சி நிர்வாகிகள் , பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.