Home செய்திகள் உசிலம்பட்டியில் தன்னார்வ இளைஞர்களை பாராட்டி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி

உசிலம்பட்டியில் தன்னார்வ இளைஞர்களை பாராட்டி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகி

by mohan

தமிழகம் முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.அத்யாவசிய தேவைகள் தவிர பொதுமக்கள் வீட்டை வெளியே வர வேண்டாம் என போலிசார் அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில் உசிலம்பட்டியைச் சோ்ந்த 58 கிராம வட்டார இளைஞா்கள் குழு சாா்பில் சௌந்திரபாண்டியன் தலைமையில் இளைஞா்கள் எழுமலை உசிலம்பட்டி மற்றும் சுற்று வட்டார  கிராமங்களில் நோய் எதிா்ப்பு சக்தி மருந்தான கபசுர குடிநீரை இலவசமாக வழங்கி வருகின்றனா்.இந்நிலையில் இவா்களின் சேவையைப் பாராட்டி தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் உசிலம்பட்டி ஒன்றிய செயலாளர்தவசி உசிலம்பட்டியில் மக்கள் சேவையாற்றிவரும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி பாராட்டுகளையும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!