20
மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் நிலையில் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை உணர்த்தும் விதமாக கரும்பு பயிருடன் ஊர்வலமாக வந்தனர்.
அதனை தொடர்ந்து மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அருளானந்தம், பெரிய மாயன், ஒன்றிய செயலாளர் பதவிக்கு கருப்பு சாமி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். மேலும் அழகுமனி,மகாதேவி,காசியம்மாள்,ராஜா,பால்பாண்டி,பெரியகருப்பன், பரமேஸ்வரி, சத்யா, குமார் போன்றோர்களும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர்.
உசிலை சிந்தனியா
You must be logged in to post a comment.