வெளுத்துக்கட்டும் கோடைமழை! செங்கத்தில் சுற்று வட்டார பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை!!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரத்தில் நேற்றைய தொடர்ந்து தற்போதும் கனமழை கொட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் இருந்து வருகிறது. தமிழகத்தில் கோடைவெயில் வெளுத்து வாங்குகிறது.
இதனால் பகல் நேரங்களில் எந்த சாலைகளிலும் ஆள் நடமாட்டமே இல்லாத நிலைதான் இருந்து வருகிறது. இந்த நிலையில் செங்கம் சுற்றுவட்டார கிராமங்களான பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. சூறைக் காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன செங்கம் பேருந்து நிலையத்தில் காவல்துறையின் பந்தல் ,பேரிகார்டு காற்றில் பறந்து செல்லப்பட்டது. தொடர்ந்து தற்போதும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் கோடையின் உக்கிரம் சற்றே தணிந்த நிலை காணப்ப்டுகிறது.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
You must be logged in to post a comment.