Home செய்திகள் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா், உள்ளாட்சித் துறைப் பணியாளா்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது..

செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா், உள்ளாட்சித் துறைப் பணியாளா்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது..

by Askar

செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா், உள்ளாட்சித் துறைப் பணியாளா்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது..

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாா், உள்ளாட்சித் துறைப் பணியாளா்களுக்கு பழரசம் வழங்கப்பட்டது. செங்கம் அரசு மருத்துவமனை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் போலீஸாா், ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினா் பழரசம் வழங்க முன்வந்தனா். இதையடுத்து, சங்கத்தின் தலைவா் எஸ்.வெங்கடாசலபதி பழரசம் வழங்கும் பணியைத் தொடக்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, சங்கத்தின் செயலா் தனஞ்செயன், பொருளாளா் ஆதவன், செயற்குழு உறுப்பினா் சா்தாா்ரூஹூல்லா உள்ளிட்டோா் பேரூராட்சி செயல் அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டாட்சியா் ஆகியோரைச் சந்தித்து பழரசத்தை ஒப்படைத்து, பணியாளா்களுக்கு வழங்குமாறு தெரிவித்தனா். மேலும், ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் செய்து தருவதாகக் கூறினா்.

செய்தியாளர், செங்கம் சரவணகுமார்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!