Home செய்திகள் கோடை விடுமுறையையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு தேவாலயங்களில் பைபிள் வாசிக்கும் பயிற்சி..

கோடை விடுமுறையையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு தேவாலயங்களில் பைபிள் வாசிக்கும் பயிற்சி..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் கோடை விடுமுைறையை முன்னிட்டு தேவாலையங்களில் பைபிள் வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது, இங்கு சிறு குழந்தைகள் முதல் பள்ளி மாணவ மாணவியர் வரை கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றார்.

சிறு குழந்தைகள் எளிதாக பைபில் வாசிக்க கற்றுக் கொள்ள ஏதுவாக ஆடல் பாடலுடன் பைபிள் வசனங்கள் கற்று தரப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கே உரித்தமான கார்ட்டூன் பொம்மைகள் மற்றும் படம் வரைதல், வட்டமாக அமர்ந்து குழுகதைகள் பேசி பைபிள் வாசிக்க கற்றுத் தரப்படுகிறது. தினமும் காலை 9-மணி முதல் மதியம் 1-மணி வரை நடத்தபடுகிறது. இதில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்

இதனால் இந்த கோடை விடுமுறையை குழந்தைகள் பயனுள்ளதாகவும் ஒழுக்க நெறிமுறைகளை கற்றுக்கொள்ளவும் ஏதுவாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!