Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தெருவிளக்கு எரியாத காரணத்தினால் இருளில் மூழ்கிக் கிடக்கும் தெருக்கள் ….

தெருவிளக்கு எரியாத காரணத்தினால் இருளில் மூழ்கிக் கிடக்கும் தெருக்கள் ….

by ஆசிரியர்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 75 மற்றும் 76 வது வார்டு பகுதிகளில் மாடக்குளம் மெயின் ரோடு நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் இருளில் மூழ்கிக் கிடக்கிறது.  இதனால் சமூக விரோத பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயலுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளதாகவும், ஆதலால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 76 வது வார்டு நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பகுதியில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக தெரு விளக்கு எரியவில்லை, இதனால் இருட்டில் மூழ்கியுள்ளதாகவும், உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!