25
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த போது உசிலம்பட்டி அருகே கணவாய் பகுதியில் கேரளாவிலிருந்து இருந்து வந்த இன்னோவா காரை சோதனை செய்தபோது கேரளா மாநிலம் கட்டப்பனை சேர்ந்த ஆபிரகாம் மகன் ஜேக்கப் வயது 47 என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 190 இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் அத்தொகையை டாஸ்மாக் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி மற்றும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆகியோர் பறிமுதல் செய்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்
You must be logged in to post a comment.