7
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு போட்டி நடந்தது. சுகாதாரம் பேணுவோம், கழிப்பறையை பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் வரைதல், வண்ணம் தீட்டும் போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோமகன் துவக்கி வைத்தார். ஆசிரியர் திருமேனி நாயகம் போட்டிகளை நடத்தினார். மாணவிகள் . மகா ஸ்ரீ, ஹரிதா ஷினி, ஜெயபிரகாஷ் ஆகியோர் பரிசு வென்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியை உஷா ஏற்பாடு செய்தார்.
You must be logged in to post a comment.