16
இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் முக்கிய நிகழ்வான ஆடித்திருக்கல்யாண திருவிழா இன்று காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தன.
விழாவின் தொடர் நிகழ்வாக ஜூலை 31ல் ஆடி அமாவாசை, ஆக., 2ல் தேரோட்டம் நடைபெறுகிறது . ராமநாதசுவாமிக்கும், பர்வத வர்த்தினி அம்பாளுக்கும் ஆக.5 இரவு 7:30 முதல் 8:30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. கோயில் அறங்காவலர் குமரன் சேதுபதி, கோயில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் ஜெயா, கோயில் கட்டுமான பணி உதவி கோட்ட இயக்குநர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் ககாரின் ராஜ், நேர்முக உதவியாளர் கமலநாதன், மேலாளர் முருகேசன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
You must be logged in to post a comment.