புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் மற்றும் கணித துறை சார்ந்த 60 மாணவர்கள் கார்டோசாட்-3 செயற்கைகோள்PSLV C47 ராக்கெட் மற்றும் செயற்கை கோள் ஏவ படுவதை 27.11.19 அன்று நேரில் சென்று பார்வை இட்டு ராக்கெட் அறிவியல் பற்றி தெரித்து கொண்டனர். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட்-3 செயற்கைகோளுடன் இணைந்து வணிக ரீதியாக அமெரிக்க நாட்டிற்கு சொந்தமான 13 நானோ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் மூன்றாம் தலைமுறை நவீன செயற்கைகோள் ஆகும். இது துல்லியமாக புகைப்படங்கள் எடுத்து அனுப்பும் திறன் கொண்டது. மேலும், இந்த செயற்கைகோள் பெரிய அளவிலான நகர பயன்பாட்டு திட்டம், கடற்கரையோர நிலங்களின் பயன்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் தலைவர் சிவன் மற்றும் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி மாணவர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.