Home செய்திகள் தமிழக முதல்வர் செப்.22, 23ல் தென் மாவட்டங்களில் ஆய்வு

தமிழக முதல்வர் செப்.22, 23ல் தென் மாவட்டங்களில் ஆய்வு

by mohan

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செப்.22, 23ல் தென் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தவுள்ளார். ஆய்விற்காக செப்.22 காலை 7 மணியளவில் மதுரையில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9:30 மணியளவில் ராமநாதபுரம் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3:30 மணியளவில் தூத்துக்குடி ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். ஆய்வு கூட்டம் நிறைவுக்குப் பின் கார் மூலம் நாகர்கோவில் சென்று இரவு தங்குகிறார். செப்.22 காலை 9:30 மணியளவில் நாகர்கோவில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 3:30 மணியளவில் விருதுநகர் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். கூட்டம் நிறைவுக்கு பின் அன்றிரவு சேலம் செல்கிறார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!