13
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கொரானா தொற்று அதிகரிப்பால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொற்றால் 299 பேர் பாதித்துள்ள நிலையில் மேலும் 15 பேருக்கு இன்று (22.6.2020?தொற்று உறுதியாகி உள்ளது. இதில் ராமநாதபுரத்தில் ஒரு பெண், 4 ஆண்கள், பரமக்குடியில் 3 ஆண்கள், ஆலம்பாடி போகலூர்,பனைக்குளம், புதுமடம், எஸ்.தரைக்குடி, பகுதிகளில் தலா ஒரு ஆண், முதுகுளத்தூர், நரிப்பையூரில் தலா ஒரு பெண் என 15 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரானா பாதித்தோர் எண்ணிக்கை 314 ஐ எட்டியது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேர் உள்பட 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
You must be logged in to post a comment.