23
கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் முழுவதும் உதகையில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், மே மாதம் 17, 18, 19, 20 மற்றும் 21-ம் தேதிகளில் 123-வது மலர்க் கண்காட்சியும், மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்காட்சியும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற கண்காட்சிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ரோஜா கண்காட்சி உட்பட பிற கண்காட்சிகள் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
You must be logged in to post a comment.