Home செய்திகள் நிலக்கோட்டை அருகே டில்லியிலிருந்து வந்தவருக்கு கொரோனா.. கிராமத்திற்கு சீல்

நிலக்கோட்டை அருகே டில்லியிலிருந்து வந்தவருக்கு கொரோனா.. கிராமத்திற்கு சீல்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வடிவேல் மனைவி இந்திரா  32. இவர் கடந்த சில ஆண்டுகளாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் 3 தினங்களுக்கு முன்பு டெல்லியிலிருந்து சென்னை வந்து கணவர் வடிவேலை அழைத்துக்கொண்டு பின்னர் சொந்த ஊரான கட்ட கூத்தன்பட்டி வந்துள்ளார். இவ்வாறு வந்த இந்திராவை உடனடியாக கொரானா தொற்று பற்றி ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்திரா உடனடியாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள  பாதுகாப்பு மையத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்திராவின் கணவர் வடிவேல், மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேர் கிராமத்தில் தனிமைப்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  கிராமத்தில் கடந்த 2 தினங்களாக தங்கியிருந்தபோது கிராம மக்களுடன் நெருங்கிப் பழகி உள்ளார். அதன் காரணமாக கிராமத்தில் உள்ள அனைவரையும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் கட்ட கூத்தன்பட்டி பகுதியை நான்கு புறங்களிலும் போலீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கிராமம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு முற்றிலும பாதுகாப்பு வளையத்திற்குள் அடைக்கப்பட்டுள்ளது.இந்தப் பாதுகாப்பு பணியில் அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா, கிராம நிர்வாக அலுவலர் பாண்டியராஜன், கிராம உதவியாளர் பிரபு உள்ளிட்ட பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். நிலக்கோட்டை நிருபர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!