கீழக்கரையில் டாக்டர் கலாம் ஆட்டோ சங்கத்தினர் இன்று திரளாக காங்கிரஸ் கட்சியில் மாவட்ட செயலாளர் எஸ் அஜ்மல்கான் முன்னிலையில் இணைந்தார்கள். கட்சியில் இணைந்தவர்கள் “நாங்கள் எதையும் பெறுவதற்காக கட்சியில் இணையவில்லை இனி எதையும் இழந்துவிடக்கூடாது என்பதற்காக நாங்கள் காங்கிரஸ் கட்சியை தேர்வு செய்கிறோம் என்றனர்.
ஐந்தாண்டு கால மோடி ஆட்சியில் இருந்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் குமுறலாக இது இருந்தது. நாம் எதையும் பெறுவதற்காக அல்ல தற்போது உள்ளதை இழந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்பதற்காக ஒரே அணியாக அனைவரும் திரள வேண்டும் நமது நாடு வளம் பெற வேண்டும் நலம் பெற வேண்டும் பாசிசத்தை வீழ்த்தி மனிதநேயத்தை காக்க வேண்டும் என்பதற்காக ஒரே அணியான காங்கிரஸ் தேசிய கட்சியில் எங்களுடைய கலாம் ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் இன்று இணைந்தோம் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என மேலும் தெரிவித்தனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியில் இன்ஜிநியர் நஸீர் உடன் இருந்தார்.
You must be logged in to post a comment.