7
முன்னாள் இந்திய பிரதமர் ஜவகர்லால் நேருவின் 55வது நினைவு நாள் விழா திருப்புல்லாணி வட்டார காங்., கமிட்டியின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. வட்டார காங்., கமிட்டியின் தலைவர் என்.சேதுபாண்டியன் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வண்ணாங்குண்டு ரெத்தினம், கிராம கமிட்டி நிர்வாகிகள் நாகரெத்தினம், தியாகராஜன், தங்கவேல், முருகாண்டி, பெரியபட்டினம் முகம்மது உசேன், ரெத்தினக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நேருவின் உருவப்படத்திற்கு மாலையணிவித்தும், மலர்துõவியும் மரியாதை செலுத்தினர். நேருவின் வாழ்நாள் சாதனைகள் குறித்து காங்., கட்சியினர் பொதுமக்களிடம் விளக்கி கூறினர். ஏற்பாடுகளை திருப்புல்லாணி வட்டார காங்., கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
You must be logged in to post a comment.