Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கொலைவழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது..

கொலைவழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் கைது..

by ஆசிரியர்

மதுரை பைக்காரா, கண்மாய்கரையை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ராஜேந்திரன் என்பவர் தனது மகன் சதீஷ்குமார் 24/19 தெற்கு மாரட் வீதியில் ரத்தக்காயங்களுடன் இறந்துகிப்பதாக சி1 திடீர்நகர் ச&ஓ காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திருமதி. கோமதி  புலன் விசாரணை செய்ததில் குடும்ப பிரச்சினை காரணமாக சதீஷ்குமாரை சதீஷ்குமார் மனைவியின் உறவினர் களான 1. விஜய் 22/19, த.பெ. கணேசன், பாலரெங்கநாதபுரம், மதுரை. 2. தனபாண்டியன் 21/19, த.பெ.பாண்டி, காளியம்மன் கோவில்தெரு, முத்துப்பட்டி, மதுரை, 3. ஆனந்த் 21/19, த.பெ.செல்வம், ஹார்விபட்டி, மதுரை மற்றும் அரவிந்த் 22/19, பாலரெங்கநாதபுரம், பைக்காரா, மதுரை ஆகிய நால்வரும் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையின் முடிவில் தெரியவந்தது. எனவே அவர்கள் நான்குபேரையும் இன்று காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!