12
இன்று 4.6.2020 ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி கீழக்கரையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு நடத்தினார். தடை செய்யப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் தண்ணீர் வாகனம் செல்வதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்.
உடன் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கீழக்கரை நகர் செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி, திமுக மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் V.S ஹமீது சுல்தான், மக்கள் டீம் காதர், ஹாசன்,பயாஸ், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
கீழை நியூஸ் SKV சுஐபு
You must be logged in to post a comment.