திருப்பரங் குன்றம் அருகே நிலையூரில். சரக்கு (மதுபானம்)வாங்க சாரை சாரையாக குவிந்த குடிமகன்கள்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா டாஸ்மாக் மதுபானக் கடை எண் 5410 உள்ளது.ஆஸ்டின் பட்டி போலீசார் .எச்சரிக்கையை மீறி செயல்பட்ட மதுபானக்கடைதமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மதுபான கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் இன்று நிலையூர் பகுதி மதுபானக் கடை TAsmac எண் 5410 கடையில் கூட்டம் கூட்டமாக குடிமகன்கள் சரக்கு ,வாங்கி குவிந்தனர். மதுரை மாநகராட்சி எல்லையருகே உள்ள கடை என்பதால் சுமார் 2 ஆயிரம் குடிமகன்கள் பைக், ஆட்டோக்களில் குவிந்தனர்..இது குறித்து தகவலறிந்த ஆஸ்டின்பட்டி காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயற்சித்தும் முடியவில்லை 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் கூடியதால்நிலையூர் டாஸ்மாக் கடையில் திருவிழா போல் கூட்டம் அலைமோதியது.போலீசார் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட கடை எண் 5410ல் மதுபானம் விற்பதி ல் குறியாக இருந்தனஇருந்தனர்.பின்னர் ஒரு வழியாக வழக்கு போடுவதாக மிரட்டி குடிமகன்களை போலீஸார் விரட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.