14
பெரும்பாலும் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் நலனிற்காக மாதாந்திர ஆயிரம் ரூபாய் சலுகை கட்டண அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சலுகை கட்டண பயண அட்டையை கொரோனோ பொது முடக்கம் காரணமாக பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சில நாட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த இழப்பினை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் மாதம் மாதத்திற்கான சலுகை கட்டண பயண அட்டையை இன்று முதல் வரும் ஜூலை 3ஆம் தேதி வரையும் மே மாதத்திற்கான சலுகை கட்டண பயண அட்டையை ஜூலை15ம் தேதி வரையும் பயன்படுத்தி கொள்ளலாம் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழக மதுரை மண்டல மேலாளர் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.