Home செய்திகள் சோழவந்தான் அருகே மலையடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

சோழவந்தான் அருகே மலையடிவாரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

by mohan

சோழவந்தான் அருகே நாராயணபுரம் விக்கிரமங்கலம் ரோடு நாகமலை அடிவாரத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக தென்கரை கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ்க்கு தகவல் கிடைத்தது இதன்பேரில் ஜெயபிரகாஷ் காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் வசந்தி காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரி கண்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர் இறந்து கிடந்தவர் சுமார் 60 வயது மதிக்கத்தக்கவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து வந்து அதை கழற்றி வைத்துவிட்டு மதுவில் விஷம் அருந்தி குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் முதல் விசாரணையில் தெரியவந்தது அவர் வந்த சைக்கிள் அருகில் இருந்தது இதுகுறித்து காடுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிண த்தை கைப்பற்றி சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!