Home செய்திகள் காரைக்குடியில் பர்மா காலனியில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

காரைக்குடியில் பர்மா காலனியில் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

by mohan

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனி வள்ளுவர் நகர் மெயின் ரோட்டில் வசிப்பவர் செம்பையா மகன் செந்தில் குமார் (40),.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில்,  நள்ளிரவு இவரது வீட்டில் மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.இதில் செந்தில்குமாரின் சமையலறையில் பெட்ரோல் குண்டு விழுந்து எரிந்துள்ளது.

சமையலறையிலுள்ள கிரைண்டர், மிக்ஸி மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.செந்தில்குமார் மற்றும் குடும்பத்தினர் அருகில் உள்ள ஏசி அறையில் படுத்து தூங்கிய காரணத்தினால்.தீ பிடித்தது தெரியாமல் உடனடியாக எழுந்து தீயை அணைக்க முடியவில்லை.பின்னர் புகை படுக்கை அறைக்குள் வருவதை பார்த்து சுதாரித்து எழுந்த செந்தில்குமார் வீட்டு முன் பக்க கதவை திறந்த போது வீட்டு வாசலில், காரைக்குடி வடக்கு காவல்துறையினர் நின்று உள்ளனர்.

அவர்கள் உங்கள் வீட்டில் தீ பிடித்துள்ளதாக எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் கூறியதை தொடர்ந்து நாங்கள் வந்து உங்களை அழைத்தும் நீங்கள் எழுந்து வரவில்லை என கூறி தீ மேலும் பரவாமல் காவல்துறையினர் அனைத்துள்ளனர்.செந்தில்க்குமார் தனது எதிர் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் கண்ணன் தான் பெட்ரோல் குண்டு விசியதாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார் .ஆட்டோ ஓட்டுனர் இவரே தனது வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி விட்டு எனது மீது பொய் புகார் அளித்துள்ளார். என கூறியதாக தெரியவருகிறது.வடக்கு போலீசார் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.முதல் கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த பெட்ரொல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கலாம் என போலிசார் சந்தேகிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!