Home செய்திகள் அதிமுக அரசு கொரானா ஊரடங்கு காலத்திலும் பொது மக்களுக்கு பல பொருட்களை வழங்கி தொண்டாற்றி வருகிறது. ராஜன் செல்லப்பா பேட்டி.

அதிமுக அரசு கொரானா ஊரடங்கு காலத்திலும் பொது மக்களுக்கு பல பொருட்களை வழங்கி தொண்டாற்றி வருகிறது. ராஜன் செல்லப்பா பேட்டி.

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கொரானா ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வறுமையில் வாழும் ஏழை எளிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கலந்துகொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா எம்எல்ஏ திமுக ஏற்படுத்துகிற மாயையை முறியடிக்கும் வகையில் அதிமுக அரசு மிக அற்புதமாக எளிய மக்களுக்கு அனைத்து வகையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .மேலும் அரசுடன் சேர்ந்து தன்னார்வத் தொண்டர்களும் பல்வேறு சமூக அமைப்புகளும் கட்சிகளும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றது என்று கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!