9
மதுரை மாநகரில் காவல் துறை பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் தேவையின்றி அத்தியாவசியமாக சாலையில் தெருவிற்கு எச்சரித்தும் வாகனத்தை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் வருகிறார்கள். இதில் ஒரு சிலர் தேவையின்றி வாகனத்தில் உலா வருவதால் நோய்த்தொற்று தீவிரம் அறியாமல் ஏன் இருக்கிறீர்கள் என்று காவல்துறை அறிவுரை வழங்கினா். ஒரு நபர் ஒரு வயது குழந்தையுடன் இந்த பகுதியில் வந்து கொண்டிருந்தார். எதற்கு வந்தாய் என்று கேட்டபோது இல்லை சும்மா தான் வந்தேன் என்றாா். உடனடியாக அந்த தந்தைக்கு ரூபாய் 1000 அபராதம் விதித்து வெளியே வரக் கூடாது எனவும் எச்சரித்து அவரை அனுப்பிவைத்தனர். உடனடியாக வீட்டுக்கு சென்று குழந்தையை குளிப்பாட்டி விடவும் சொன்னார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.