Home செய்திகள் இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கிய மற்றொரு மாணவர் சிகிச்சை பலனின்றி பலி

இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கிய மற்றொரு மாணவர் சிகிச்சை பலனின்றி பலி

by mohan

திருப்பரங்குன்றத்தில் இருந்து அவனியாபுரம் செல்லும் சாலையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாக தடுப்புச்சுவரில் அதிவேகமாக வந்த அதே கல்லூரியைச் சேர்ந்த BE 3-ஆம் ஆண்டு (Mech) மாணவன் அர்பித்சிங் மற்றும் அவரது நண்பர் சஞ்சு ஜி சங்கா 2-ஆம் ஆண்டு (CS) தியாகராஜா பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்கள். கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் கல்லூரி வளாகத்தை விட்டு அதிவேகமாக வாகனத்தை இயக்கி உள்ளார். சாலையின் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி தடுப்புச் சுவரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே அர்பித்சிங் உயிரிழந்துள்ளார். அவரது நண்பர் சஞ்சு ஜி சங்கா உயிருக்கு போராடிய நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த திருப்பரங்குன்ற காவல் ஆய்வாளர் மதன கலா சாலையில் கிடந்த பிரேதத்தை நேதாஜி ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தபின் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.இறந்தவர் பற்றி விசாரணையில் அதே கல்லூரி என்று தெரிய வந்த பின் கல்லூரிக்கு தகவல் கொடுத்ததன் பெயரில் முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்தவர் பஞ்சாப்பை சேர்ந்தவர் ஹர்ப்ரீட் சிங் என்றும் அவருடன் வந்தவர் (சஞ்சு ஜி சங்கா) மேகாலயாவை படுகாயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் தெரியவந்தது. ஒரே வகுப்பில் கல்லூரியில் படிக்கும் மோகித் என்பவரது இருசக்கர வாகனத்தை வாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் இரு மாணவர்கள் உயிர் இழந்தது கல்லூரி மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!