22
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் 11 வது நாளாக ஊரடங்கு தொடரும் நிலையில் அரசு அறிவித்த கொரானா நிவாரண உதவிகளை சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் காத்திருந்து வாங்கி செல்கின்றனர், இந்நிலையில் தற்போது 3 வது நாளாக அரசு அறிவித்த கொரானா நிவாரத்தொகை 1000 மற்றும் அரிசி, பருப்பு ,சர்க்கரை, எண்ணெய் ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. திருவிடைக்கழி,இலுப்பூர் ஊராட்சிகளில் அரசு நிவாரணத்தை பூம்புகார் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார், நிகழ்ச்சியில் இலுப்பூர் ஊராட்சி மன்றம் தலைவர் ரவி,திருவிடைக்கழி கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஊராட்சி பிரதிநிதிகள் இருந்தனர். மேலும் நிவாரத்தை பெற பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருந்து வாங்கி சென்றனர்.
You must be logged in to post a comment.