மதுரை அனுப்பானடி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.!
மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ள புராதன சிறப்பு வாய்ந்த ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் இத்திருக்கோவிலில் திருப்பணிகள் மற்றும் மராமத்து பணிகள் நிறைவு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த வாரம் மகா கணபதி ஹோமம் உள்ளிட்ட யாகசாலை பூஜையுடன் துவங்கியது. இதன் முக்கிய வைபவமான மஹா கும்பாபிஷேகத்தை, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் டி.ஜி வினய் அவர்களின் தலைமையில், கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோவில் கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.. இந்நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் பெருமானை தரிசித்து சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் டிரஸ்டி சி.வேங்கடசுப்பு, சி.வி.மோகன் செய்திருந்தனர்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
You must be logged in to post a comment.