எம்ஜிஆர் போன்று நமது மாவட்ட கேபி முனுசாமி உதவி செய்வாரா?? என ஏங்கும் நரிகுறவர் இனத்தை சேர்ந்த 22குடும்பங்கள்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி கிராமத்தை சேர்ந்த நரிகுறவர் இனமக்களுக்கு தண்ணார்வளர்களும் காவல்துறையும் நிவாரணம் வழங்கியும் தங்களால் அன்றாட வாழ்க்கைக்கு போராட வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசால் வழங்கப்பட்ட ரேசன் கார்டுக்கு ரூ1000 தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் இதனால் அதிமுக அரசு எம்ஜிஆர் தங்களுக்கு உதவியதுபோல் அடிப்படை வசதியின்றி தவிக்கும் எங்கள் 22 குடும்பங்களுக்கு எங்கள் மாவட்டத்தின் சாமி கேபி முனுசாமி அவர்களும் ஊத்தங்கரை அதிமுக எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் ம் அரசு வழங்கவேண்டிய ரூ 1000த்தையும் அத்தியாவிச தேவவைகள் ஆன அரிசி ,மளிகை பொருட்கள் கொடுத்து உதவவேண்டும் என நரிகுறவர் இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மறைந்த எம்ஜிஆரை இன்றும் நினைவில் வைத்திருக்கும் நரிகுறவருக்கு வாழும் எம்ஜிஆர் ஆக தெரியும் கேபி முனுசாமி உதவிடுவார் என நம்பிக்கையில் நரிகுறவர்கள்!
You must be logged in to post a comment.