Home செய்திகள் கூவம் நதியை சுத்தம் செய்யும் பணி..துவக்கி வைத்த ஆளுநர்.!

சென்னையின் துயரமாக கருதப்படும் கூவம் நதியை தூய்மைபடுத்த தமிழக அரசும் தன்னார்வலர்களும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால், எந்த முயற்சியும் முழுமையாக கைக்கொடுக்கவில்லை. அந்தவகையில் தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) சார்பில் மக்களிடையே நீர்நிலைகளின் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கூவத்தை தூய்மைபடுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாதம் இருமுறை என்பதாக தொடர்ந்து கூவம் கரைகளில் இந்த தூய்மைபடுத்தும் நிகழ்வு நடக்கவுள்ளது. அதன் முதன் நாளான இன்று சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் தேசிய பேரிடர் மீட்பு படையுடன் இணைந்து பாதுகாப்பு உபகரணங்களை அணிந்துகொண்டு கூவம் கரையில் குப்பைகளை பொறுக்கி தூய்மைபடுத்தும் பணியை துவக்கி வைத்தார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!