16
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள கல்லணை ஊராட்சியில் ,சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் சேதுசீனிவாசன் தலைமையிலும், துணைத் தலைவர் அய்யம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு முன்னிலையிலும் நடைபெற்றது.குடிநீர், சாக்கடை, பேவர் பிளாக் அமைத்தல் முதியோர் உதவித்தொகை மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், கிராம நிர்வாக அலுவலர் கணேசன், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி துணை தலைமை ஆசிரியர் பிச்சைக்கனி, ஊராட்சி செயலர் கூடுதல் பொறுப்பு பாலமுருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.