10
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வண்ணம் கீழக்கரையில் உள்ள பல சமூக நல அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவை பல்வேறான உதவிகளை செய்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக பல சமூக சேவைகள் செய்து வடக்குத் தெரு நாசா அமைப்பு, அவ்வமைப்பின் மேற்பார்வையில் இயங்கி வரும் அல் மதரஸத்துல் முஹமதியா மூலமாக புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களை அடையாளம் கண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இப்பணிக்காக அம்மமதரசாவில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு வீடு தோறும் சென்று பொருட்களை பெற்று வருகிறார்கள். மேலும் பொருட்களை நேரடியாக வந்து கொடுக்க முடியாதவர்கள் கீழே கொடுக்கப்பட்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்.
You must be logged in to post a comment.