இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கே.பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளில் மக்களை காக்கும் விதமாக டிராக்டரில் கிருமி நாசினி தெளிப்பு பணியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவலில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கொரானோ வைரஸ் பாதித்தோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவை அறிவித்து 21 நாட்கள் 144 தடை உத்தரவு அறிவிக்கபட்டுள்ளது. சமூக ஆர்வலர்கள் பலர் தங்களால் இயன்ற உதவிகளில் கொரானா நிவாரணப் பணியாக செய்து வருகின்றனர். கமுதி அருகே கே.பாப்பாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செந்தனேந்தல். சீமனேந்தல். பூமாவிலங்கை. கே.பாப்பாங்குளம் கிராமங்களில் அப்பகுதியைச் சேர்நத அரசு பள்ளி ஆசிரியர் முருகன், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொது மக்களை பாதுகாக்கும் வகையில் சொந்த செலவில் டிராக்டர் மூலம் கிரமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். சமூகப்பணியில் ஈடுபட்ட ஆசிரியர் முருகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.
You must be logged in to post a comment.