28
சித்திரைத் திருவிழா மற்றும் அதே தேதியில் தேர்தல் வரவிருக்கிற சூழ்நிலையில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் காவல்துறை அதிகாரிகள் மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுது
ஏப்ரல் 18 தேரோட்டமும், தேர்தலும் நடைபெற இருப்பதால் அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சிறப்பு டிஜிபி விஜயகுமார் மதுரைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். பல லட்சம் மக்கள் ஒன்றுகூடும் விழா என்பதால் மதுரைக்கு மட்டும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். டிஜிபி விஜயகுமார் மற்றும் மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் இவர்களுடன் தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை
You must be logged in to post a comment.