Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இணைவோம் வா திட்டத்தின் கீழ் உதவ நாடியவர்களுக்கு உதவ கோரி திமுகவினர் ஆட்சியரிடம் மனு..

இணைவோம் வா திட்டத்தின் கீழ் உதவ நாடியவர்களுக்கு உதவ கோரி திமுகவினர் ஆட்சியரிடம் மனு..

by ஆசிரியர்

விருதுநகர் மாவட்டத்தில் ஒன்று இணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் உதவி வேண்டியவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என கூறி விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் கண்ணன்யிடம் வழங்கினார்கள்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு விதித்த ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி அடுத்தவர்களுக்கு உதவ திமுக சார்பாக ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் மூலம் ஒன்றிணைத்து அவர்களுக்கு தேவையான உணவு அரிசி பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் திமுக சார்பாக வழங்கப்பட்டு வந்தது.

இதையடுத்து இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில்15 லட்சம் பேருக்கு மேல் திமுக உதவியை நாடியதால் தமிழக அரசை செயல்பட வைக்கும் நோக்கத்தில் உதவி நாடியவர்களின் ஒரு பகுதியை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணியை திமுக செய்து வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஒன்று இணைவோம் வா இந்தத் திட்டத்தின் கீழ் உதவி தேடிய 9647 நபர்களின் பெயர் முகவரி அடங்கிய தொகுப்பினை திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ ஆர் சீனிவாசன் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் ஆகியோர் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் ஒப்படைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!