15
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கிழக்கு தெரு பகுதியைச் சேர்ந்த முகமது ஆமினா உம்மாளுக்கு சொந்தமான மாருதி ஈகோ வேனை இன்று 11.04.2020. இரவு நேரத்தில் கிழக்குத் தெரு அண்ணாஅப்பா மளிகை கடை எதிர்புறத்தில் உள்ள தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
காலை நேரத்தில் அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கல்லைக் கொண்டு முன், பின் பகுதி கண்ணாடியை உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாக வண்டியின் உரிமையாளர் கீழக்கரை காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளார். கீழக்கரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீழை நியூஸ் SKV சுஐபு
You must be logged in to post a comment.