Home செய்திகள் குடிபோதையில் கணவனும் மனைவியும் செய்த வேலை.. வீடியோ வெளியானதால் பரபரப்பு..வீடியோ பதிவு..

குடிபோதையில் கணவனும் மனைவியும் செய்த வேலை.. வீடியோ வெளியானதால் பரபரப்பு..வீடியோ பதிவு..

by ஆசிரியர்

குடிபோதையில் தனது 3 வயது மகனை ஆட்டோவில் தூக்கி அடித்த தந்தையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவா கவுத் என்பவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்களன்று இரவு 2 மணியளவில்

அதீத குடிபோதையில் வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்பொழுது குடிபோதையில் தனது மகனை முதலில் காற்றில் மேலே தூக்கி வீசியும், பின் குழந்தையை தலைகீழாக பிடித்து தன் முதுகின் பின்புறம் வைத்து கொண்டு அவர் தனது குழந்தையை ஆட்டோவில் பலமாக தூக்கி அடித்துள்ளார். இதனால் குழந்தை பேச்சு மூச்சின்றி கீழே விழுந்தது.

இச்சம்பவத்தை பார்த்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர் போலிசுக்கு ஃபோன் செய்து தகவலை தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர்.

போலிசை பார்த்த சிவா கவுத் உடனே அங்கிருந்து தப்பி சென்றார். குழந்தையை மிகக் கடுமையாக தாக்கிய தனது கணவரை பற்றி மனைவி புகார் அளிக்க மறுத்துவிட்டார்.

இதனால் போலீசார் தாமாக முன்வந்து சிறார் வன்கொடுமை சட்டத்தில் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறது. தற்பொழுது குழந்தை நலமுடன் இருப்பதாக போலிசார் தெரிவித்துள்ளனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!