மாநில அளவிலான இரண்டு நாள் அறிவியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு தொடக்க விழா, திருச்சி, புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் டிசம்பர் 12 ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.தொடக்க விழாவில் மேதகு டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பட்ட, ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக பணியாற்றியவர் மற்றும் அறிவியல் எழுத்தாளர் டாக்டர் நெல்லை சு. முத்து, கலந்து கொண்டு தொடக்க உரை ஆற்றவுள்ளார். நிறைவு விழாவில் வீ.தன்ராஜ் ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ்தவான் விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றியவர் கலந்து கொண்டு சிறப்பித்து பரிசளிக்க உள்ளார்.தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் இருந்து அறிவியல் படைப்புகள், மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை தர உள்ளனர்.அறிவியல் கண்காட்சி நிகழ்ச்சியில் மாணவர்களின் அறிவியல் தொடர்பான பேட்டி, மாதிரிகளின் செயல் முறை, அடிப்படை அறிவியல் தத்துவம் பற்றிய நேரடி நிகழ்வு நடைபெறுகின்றது.அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச்சென்று காட்டி நம் குழந்தைகளுக்கு அடிப்படை அறிவியல் (basic science) தத்துவத்தை நேரடி காட்சி மூலம் சொல்லி கொடுப்போம். அது பின்னாளில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.
Category:
செய்திகள்
மதுரை தெப்பக்குளத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நடத்திய உத்தம நபி அவர்களின் உதய தின மீலாதுன்னபீ விழா
by mohan
written by mohan
மதுரை தெப்பக்குளத்தில் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை நடத்திய உத்தம நபி அவர்களின் உதய தின மீலாதுன்னபீ விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஹுஸைன் முஹம்மது தலைமை தாங்கினார். மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் ஹைதர் அலி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் தலைவர் லியாகத் அலி, செயலாளர் காஜா மைதீன், கமர்தீன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அக்பர் பாஷா, ஹக்கீம், யூசுப், சையது இப்றாஹீம், அப்துல்காதர், அஷ்ரப் தயூப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்ட ஊரக, உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (டிச.9)துவங்கியது.முதல் நாளான இன்று (டிச.9) இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர், ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு 2 பேர்,மண்டபம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஒருவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 10 பேர் மனுத்தாக்கல் செய்தனர். திருவாடானை ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், போகலூர் ஒன்றியத்தில் கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். நயினார் கோயில் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 பேர், கமுதி ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 3 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர்,கடலாடி. ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர்மனுத்தாக்கல் செய்தனர். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 37 பேர், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 13 பேர், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் என 52 பேர் மனுத்தாக்கல் செய்தனர். மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் இல்லை.தேர்தல் ஆணைய அரசாணை படி டிச.27 ல் இராமநாதபுரம், மண்டபம், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம்,திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்ட தேர்தலும், டிச.30 ல் போகலூர் , பரமக்குடி, நயினார்கோவில், முதுகுளத்தூர், கமுதி , கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. ஆகவே வேலூர்.திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 9-ம் தேதி பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடந்தது. ஆட்சியர்கள் வேலூர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் சிவனருள் ‘ராணிப்பேட்டை திவ்யதர்ஷிணி ஆகியோர் பொதுமக்களிடம் கோரீக்கை மனுக்களை பெற்றனர்.
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையை அடுத்த நாகமலை புதுக்கோட்டை அருகே கழிவுநீர் தொட்டியில் ஒரு காளைமாடு விழுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மீட்க முடியாத காரணத்தினால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சுமார் 3 மணி நேரம் போராடி மாட்டை உயிருடன் மீட்டனர் .மேய்ச்சலுக்கு சென்ற மாடு தவறி விழுந்தது. அதை காப்பாற்றிய துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அண்ணாமலை அள்ளி காப்புக் காட்டில் இருந்து சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இரை தேடி அருகே உள்ள கெட்டூர் கிராமத்திற்க்குள் புகுந்தது இதனை கண்ட கிராம மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மலைப்பாம்பை பிடித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த வனச்சரகர் செல்வம் மற்றும் வனத்துறையினர் மலைப்பாம்பை மீட்டு பிக்கிலிகாப்புக் காட்டில் விட்டனர். இக்கிராமத்தில் மலைப்பாம்பு அடிக்கடி ஊருக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் பயத்தில் உள்ளனர் எனவே வனத்துறையினர் உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வட்டார வனமையம் சார்பில் மாற்றுத் திறனாளிகள் தினவிழா ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி (உருது) சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜார்ஜ் அண்ணாதுரை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுகுணா ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை பெற்றோர் பராமரித்தல் குறித்து விளக்கி பேசினார். விழாவில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் மற்றும் நடனப்போட்டிகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு, இனிப்பு, மற்றும் பாரட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் ஆசிரியர்கள் பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் பெற்றோர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் விமலா நன்றி தெரிவித்தார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் பள்ளிவாசலில்ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா சமத்துவ திருவிழவாக வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டுமின்றி மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து ஏராளமானோர் கலந்துகொள்வர்.இந்த ஆண்டுக்கான கந்தூரி திருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை குர்ஆன் தமாம் செய்யப்பட்டது.பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு உணவு பொட்டலங்கள், குளிர்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டது.
மவ்லீது ஷரீப் ஓதுதல், ஜமாஅத் நிர்வாகிகள் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. இஸ்லாமிய மார்க்க சமய சொற்பொழிவு, இஸ்லாமிய இன்னிசை கச்சேரியும் நடத்தப்பட்டது. சிறப்பு துவா ஓதப்பட்டு கிராம பொதுமக்களுக்கு உணவுகள் வினியோகம் செய்யப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் மலேசியா தொழிலதிபர்கள் செய்திருந்தனர்.இந்நிகழ்ச்சியில் சாத்தான்குளம் ஜமாஅத் தலைவர் எச்.காபத்துல்லா, மலேசியா ஜமாஅத் தலைவர் ஏபிசி.அயூப்கான் மற்றும் நிர்வாகிகள் சிக்கந்தர்அலி, நசுரூதீன், ஹாஜி இலியாஸ், ஜெ.பி.அலிபுல்லா, சகுபர்அலி, சேட், ஹாஜி நசார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்,பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கைப்பேசி வழிப்பறி மற்றும் செயின் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு
by mohan
written by mohan
மதுரை நகரில் விளக்குத்தூண் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் 4 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்தும், தெப்பக்குளம், தெற்குவாசல், திலகர் திடல், கரிமேடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் 5 செல்போன்களை வழிப்பறி செய்த நபர்களை விரைந்து பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் உத்தரவிட்டார். காவல் துணை ஆணையர் குற்றம் பழனிகுமார் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் நகர் குற்ற சரகம் ரமேஷ் நேரடி கண்காணிப்பில் பி3 தெப்பகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கீதாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில் B3 தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் இவ்வழக்கை விசாரணை மேற்கொண்டதில் 8.12.2019-ந் தேதி தெப்பக்குளம் காவல் நிலைய எல்கையில் நடைபெற்ற செல்போன் வழிப்பறி சம்பவத்தை CCTV பதிவுகளை பார்வையிட்டதில் எதிரிகள் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை பற்றியும் தெளிவான துப்புகிடைத்தது. இன்று 09.12.2019 ஓபுளாபடித்துரை சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனை மேற்கொண்டிருந்தபோது, CCTV பதிவில் உள்ள வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் போலீஸ் பார்ட்டியை கண்டதும் ஓட முயற்சித்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில்ஜெல் என்ற சல்மான்கான்,அப்துல்ரகுமான் முகம்மது அன்சாரி, என தெரியவந்தது.மேலும் மேற்படி மூவரும் மதுரை மாநகரில் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு செல்போன் வழிப்பறி வழக்குகளும் இரண்டு இருசக்கர வாகன திருட்டு வழக்குகளிலும் மற்றும் கடந்த மாதம் திலகர்திடல் காவல் நிலையத்தில் ஒரு நகை பறிப்பு முயற்சி வழக்கிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனமும், 5 செல்போன்களும், 4 சவரன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் நடப்பு 2019 ஆம் ஆண்டு அளித்த புகார்களுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டி, மதுரை மாவட்டத்தில் 6 நாட்கள் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதன்படி முதல் முறையாக, திருமங்கலம் மற்றும் பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் (புகார் மேளாவில்) கலந்துகொண்டு, கொடுத்த புகார் மனுவிற்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், மேற்பார்வையில் உடனடியாக தீர்வு காணப்பட்டது.இதில் ஏ.டி.எஸ்பி கணேசன், டி.எஸ்.பி . விநோதினி, ஆய்வாளர்கள் .ராஜாமணி .சிவசக்தி விஜயகுமார் மற்றும் திருமங்கலம் உட்கோட்ட போலீசார் கலந்து கொண்டு, வரப்பெற்ற புகார் மனுக்களுக்கு உடனடியாக விசாரணை நடைபெற்றது. திருமங்கலம் புகார் மேளாவில் உடனடி தீர்வு கிடைத்தது தொடர்ந்து, மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.சந்தையில் வியாபாரிகள் மூடை(50 கிலோ) சின்னவெங்காயத்தை ரூ8500கும் பெரியவெங்காயம் ரூ 10000க்கும் கொள்முதல் செய்கின்றனர்.இதனை சந்தையில் சின்னவெங்காயம் கிலோ ரூ160 பெரியவெங்காயம் ரூ200க்கும் விற்பனை செய்தாலும் பொதுமக்கள் வாங்கத்தயங்குகின்றனர்.இதனால் ஒரு சில வியாபாரிகளைத்தவிர சிறு வியாபாரிகள் விற்பனையைத் தவிர்த்து வருகின்றனர்.மேலும் கார்த்திகை மாதம் என்பதால் வெங்காயம் இல்லாமல் சமைக்க பெண்களும் தயங்குகின்றனர்.ஆனால் விலையைப் பார்க்கும் பொழுது வாங்குவதற்கு யோசனை செய்கின்றனர்.இதனால் வெங்காயம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உசிலம் பட்டி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ்மற்றும் உசிலை நகர அரிமா சங்கம் சார்பாக எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பேரணி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரேச்சல் துவக்கி வைத்தார். பேரணி பேரையூர் ரோடு தேவர் சிலை அருகில் பேருந்து நிலையம் வழியாக சென்று டி இ எல்சி பள்ளியில் நிறைவாக முடிந்தது ..
நிறைவு விழாவில் அரிமா கவர்னர் அறிவழகன் செயலர் பத்மநாதன் பொருளாளர் டாக்டர் ரவீந்திரன் மற்றும் டில்சி பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோா் ஜூனியர்க ளுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் கூறி டெங்கு காய்ச்சல் பற்றின விழிப்புணர்வுகளை வழங்கினார்கள்.நிறைவில் ஜூனியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ..இப்பேரணியை உசிலம்பட்டி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் ஒலிவா சாந்த சீலி இணை கன்வீனர் பிரதீப் குமார் ஏற்பாடு செய்திருந்தனர்.பேரணியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஜே. ஆர். சி .ஜூனியர்கள் கலந்து கொண்டனர்.பேரணி சென்று கொண்டிருக்கும்பொழுது உசிலம்பட்டி ஆர்.டி.ஓ செளந்தா்யா வாழ்த்துக்கள் வழங்கினார்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் மாநகராட்சி பகுதியில் மொத்த 60 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு விதிக்கப்பட்ட வரியில் தற்போது வரை ரூ11 கோடியே 30 லட்சம் வரை வரி வசூல் ஆகி வுள்ளது. மீதி ரூ 20 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரத்து 765 ரூபாய் வசூல் ஆக வேண்டும். தமிழக அரசின் ஆணைப்படி வரி குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் மார்ச் மாதம் முடிவில் வரி வசூல் செய்யப்படும் என்று மாநகராட்சி அலுவலர் தெரிவித்தார்
கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம்-உயிரோட்டமின்றி அவ்வப்போது அரங்கேறும் ஊழல் ஒழிப்பு நாடகங்கள்!!!
by mohan
written by mohan
இன்றைய உலகில் ஒவ்வொரு நாட்டிற்கும், குறிப்பாக இந்தியாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கக்கூடிய பிரச்சினைகளில் முதலிடத்தை பிடித்திருப்பது ஊழல்.இந்த ஊழல் நாட்டின் பொருளாதார, சமூக, அரசியல் முன்னேற்றத்தையே பாதிக்கக்கூடியது. ஊழல் ஒரு கடுமையான குற்றம். ஊழலை தடுக்கக்கூடிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே டிச.9 இன்று சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
“பொது சொத்துக்களை தனியாரின் கைகளுக்கு போக விடுவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தவறாக பயன்படுத்துவது, பொதுப்பணத்தில் முறைகேடுகள் செய்வது” ஆகியவை ஊழல்களாக பார்க்கப்படுகிறது. இது பல வழிகளில் நடக்கிறது. லஞ்சம், மோசடி, டெண்டர்களில் விரும்பியவர்களுக்கு வளைந்து கொடுப்பது, சட்ட விதிகளை பின்பற்ற மறுப்பது ஆகியவற்றின் மூலம் ஊழல் பெருகுகிறது.ஊழல் தொடர்பாக மொத்தம் 177 நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஊழல் குறைவாக உள்ள பட்டியலில் டென்மார்க், நியூசிலாந்து, பின்லாந்து, ஸ்வீடன், நார்வே ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இந்தியா, 94வது இடத்தில் உள்ளது. அப்படியெனில் இந்தியாவை விட, 93 நாடுகளில் ஊழல் குறைவாக உள்ளது.
அரசு நிறுவனங்களில் நியாயமாக சான்றிதழ் பெறுவதற்கு, லஞ்சம் என்பது, அவசியமான ஒரு “ஆவணம்” என்று சொல்லும் அளவுக்கு நிலைமை படுமோசமாக உள்ளது. லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்ட விரோதமாகவும், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் ஒரு தொழிலாகவே பழகிவிட்டனர். நாட்டின் மக்களும் அதற்கு துணை போகின்ற நிர்பந்த நிலை உள்ளது. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும், இதனால் தண்டனை பெற்ற அதிகாரிகள் மற்றும் மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. “நாட்டு மக்கள் நமக்கு எதற்கு வம்பு” என்று எதிர்க்காமல் இருப்பதே இதற்கு காரணம். அரசு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது என்றால் அதனை வெற்றிகரமாக செயல்படுத்துவது அதிகாரிகளின் கைகளில் உள்ளது. அதிகாரிகளே தவறு செய்யும் போது, மக்களின் வரிப்பணம் ஊழல் என்ற பெயரில் தனிநபரின் பாக்கெட்டுக்கு செல்கிறது. ஒழிக்க வேண்டியவர்களே ஊழல் செய்தால் எப்படி நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும்.அரசு அலுவலங்களில் மட்டும் அல்ல, முக்கிய பொது இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினரின் முகவரி, போன் எண்களை தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.
அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் தைரியமாக புகார் செய்ய முன் வர வேண்டும். ஊழல் வழக்கில் கைது செய்யப்படுபவர்களின் பெயர்களை, பொது இடங்களில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும்.ஊழல் வாதிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். அவர்களது வேலையையும் பறிக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களிடம் ஊழல் செய்யும் எண்ணம் வராது தடுக்க இயலும்.
ஆனால் தற்போது நடைமுறையில் ஊழல்,லஞ்சத்தில் ஈடுபாடு உடையவர்களே ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்கும் நோக்கில் பல விழிப்புணர்வுகளை செய்வதாகவும்,தடுக்க முயற்சிப்பது போன்றும் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையான தனது செயல்பாடுகளின் போது,கடமையின் போது இது நேர்மாறலாக உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலை மாறும் போது லஞ்சம் ஊழல் ஒழிக்கப்படுவது உறுதி.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இராமநாதபுரம் மாவட்டம் சத்திக்குடி அருகே செவ்வூரில் கர்ப்பிணிகளுக்கான கர்ப்ப கால விழிப்புணர்வு முகாம் இன்று காலை தொடங்கியது. இதில் கலந்து கொள்ளும் போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் 4 பேரை ஏற்றிக்கொண்டு சுகாதார துறை வாகனம் சென்றது. அவர்களை இறக்கிவிட்டு திரும்பிய வாகனம் சின்ன நாகாச்சி அருகே வந்தபோது சின்ன நாகாச்சி செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு சாலையை கடக்க முயன்றது. அப்போது பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பசு மாடு மீது மோதி,மழைநீர் தேங்கிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பசு மாட்டின் பின்னங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய டிரைவர் சாத்தையாவை பொதுமக்கள் மீட்டனர். காயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அரசு துறையில் வேலை கிடைப்பது என்பது ம்க வும் கடினமான விசயம், அதே சமயம் அதுவே பல பேருக்கு கனவாகவும் இருக்கும். ஆனால் அந்த கனவை நினைவாக்க முறையான பயிற்சி என்பது மிக அவசியம். இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வணிக மயக்கப்பட்டுவிட்ட சூழலில் கல்வியும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது.
ஆனால் அக்குறையை தீர்த்து ஆர்வம் உள்ள அனைவரும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் இராமநாதபுரத்தில் MUGAVAI EDUCATION & EMPOWEREMENT TRUST (MEET) சார்பாக 14/12/2019 முதல் காலை 9.00 முதல் 12.00 வரையும், மாலை 2.00 முதல் 4.50 வரை இலவச பயிற்சி முகாம் 8 மாதங்கள் நடத்தப்பட்ட உள்ளது.
இம்முகாம் இராமநாதபுரம் சின்னக்கடை பள்ளிவாசல் தெருவில் உள்ள CRESCENT MATRICULATION HIGHER SECONDARY SCHOOL வளாகத்தில் நடைபெற உள்ளது.
இம்முகாம் சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு 9003399472, 9500782122, 9087789367 ஆகிய அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தனியார் உணவு விடுதி அருகே மின்கம்பத்தில் திடீரென தீப்பிடித்தது. பொதுமக்கள் உடனடியாக மதுரை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மதுரை தீ தடுப்பு அதிகாரி வெங்கடேசன் குழுவினர் விரைந்து சென்று மின்கம்பத்தில் பற்றி எரிந்த தீயை விரைவாக அணைத்தனர். அதற்கு முன் மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை உடனடியாகத் துண்டித்து தீ அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அமைதி நிலவும் சபரிமலை.. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. இரண்டே நாளில் 70,000 பேர் தரிசனம்
by mohan
written by mohan
சபரிமலை ஐயப்பன் கோவில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்று கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதன்பிறகு மண்டல மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டபோது, அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. மகளிர் போராட்டக் குழுக்களை சேர்ந்த பெண்களும் அங்கு வருகை தந்த நிலையில் வலதுசாரி அமைப்பினர் அவர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்தனர்.இதையடுத்து காவல்துறையினர் தலையிடும் அளவிற்கு நிலைமை சென்றது. அதேநேரம் இம்முறை அதுபோன்ற ஒரு பதட்டமான சூழ்நிலை இந்த வருடம், இல்லை என்பதால் பக்தர்கள் கடந்த வருடத்தை காட்டிலும் அதிக அளவுக்கு வருகை தந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சபரிமலை பக்தர் ஒருவர் கூறுகையில், கடந்த வருடம் போல இல்லாமல், இந்த வருடம் அமைதியான சூழ்நிலை நிலவுவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம், என்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு 65 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.இருப்பினும் கடந்த முறை உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த அடிப்படையில், அனைத்து வயது பெண்களும், தொடர்ந்து கோவிலுக்கு செல்லலாம். அதற்கு தடை விதிக்கப்படவில்லை. இருப்பினும் இதுபோல வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று கேரள அரசின் அமைச்சர்கள் பலரும் தெரிவித்துள்ளதால் இந்த முறை இளம் வயது பெண்கள் வருகை மிக மிக குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. மழை பெய்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. எனினும் மழை நீர் வடிந்தாக தெரியவில்லை. அந்த மழைநீரில் டெங்கு கொசு மற்றும் மிகப்பெரிய கொசு இரவு நேரங்களில் வீடுகளில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடிக்கிறது .அது ஈ போன்றுபொிதாக உள்ளது. கடிக்கும் பொழுது மிகப்பெரிய வலிகளும் ஏற்படுகிறது. .குழந்தைகளை கடிக்கும் பொழுது வலி தாங்காமல் அழும் போது கண்ணீர் வருகிறது .இதனால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழை நீரை அகற்றி கொசு மருந்துகளை அடிக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை ரயில் நிலையம் முதல் வடபழஞ்சி வரை போடி லைனில் பழைய இரும்பு பாதையை அகற்றி பகுதியே இரும்புப் பாதை பதிக்கும் பணி தீவிரம். மதுரையிலிருந்து போடி வரை செல்லும் மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு பின் அகல பாதையாக உசிலம்பட்டி வரையில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டது இந்த நிலையில் இன்று மதுரை ரயில் நிலையத்தில் இருந்து வடபழஞ்சி வரையிலான இரும்பு பாதையை அகற்றி புதிய இரும்பு பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த பணியானது ராட்சத ரயில் மூலமாகவே இரும்பு தண்டவாளங்களை பதிக்கும் பணி நடைபெற்று வருகிறத இதனை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்து கைபேசியில் மூலமாகவும் படமும் எடுத்து சென்றனர் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு சரக்கு ரயில் ஒன்று செல்வதைப் பார்த்து பொதுமக்கள் ரசித்தனா்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.