வேலூர் அடுத்த காட்பாடி பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக் கூட்டம் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் தலைமையில் நடந்தது.பெண் குழந்தை பாதுகாப்பு ஆண்டு முன்னிட்டு சிறுமி அம்மா பிறந்தநாள் கேக் வெட்டினார்.கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அப்புஅண்ணா தொழிற்சங்க பொருளாளர் ஆனந்தன் ஒன்றிய செயலாளர் சின்னதுரை மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜேஷ்6 – வது வட்ட செயலாளர்கள் ரவி, சுப்பிரமணி இளைஞர் அணி துணை தலைவர் வேலு மாணவரணி செயலாளர் அண்ணாதுரைமுன்னாள் மேலவை பிரதிநிதி பாரிவள்ளல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Category:
செய்திகள்
வருகிற மார்ச் 8 உலக மகளிர் தினம் கொண்டாட படுகிறது. புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் உயர்கல்வியில் மகளிர்கான முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள் படிக்கின்றனர். பணிபுரியும் பேராசிரியர்களின் மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர், குறிப்பாக ஆராய்ச்சித் துறையில் பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். 1983 ஆம் ஆண்டு கணினி ஆய்வகத்தின் திறந்து வைத்து உரையாற்றிய பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பெரியாயியும் கணினி பயில்கிறாள் என்று உரையாற்றினார்.
அவரது கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதுமாக இக்கல்லூரியில் பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி சிறப்பு செய்து வருகின்றனர்.மகளிர் கல்விக்கு முக்கியத்துவம் தரும் விதத்தில் பரந்து விரிந்த மகளிர் விடுதிகள், மகளிருக்காக தனியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான கிராமப்புற பெற்றோர்கள் எதிர்பார்க்கிற மகளிர் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான உரிய இடமாக நேரு நினைவுக் கல்லூரி திகழ்கிறது.இதனை மெய்ப்பிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மகளிர் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக நடைபெற்றுவருகின்றன குறிப்பாக மகளிருக்கான ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது. மிகச் சமீபமாக இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் “அறிவியலில் மகளிர் 2020” என்ற மையக்கருத்தை மெய்ப்பிக்கும் விதமாக இயற்பியல் ஆராய்ச்சி துறையின் சார்பாக தேசிய அறிவியல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் பத்து மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.கணிதவியலில் முனைவர் பட்டம் பயிலும் நித்யா என்ற ஆராய்ச்சி மாணவி 600க்கும் மேற்பட்ட மாணவிகள் முன்னிலையில் பிற மாணவிகளும் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றும், பெண்கள் ஆராய்ச்சியில் ஈடுபட மிகச் சாதகமான பாதுகாப்பான கல்வி கேந்திரம் நமது நேரு நினைவுக் கல்லூரி என்றும் தனது அனுபவங்களை மாணவி பகிர்ந்து கொண்டார். பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பெரும்பான்மையான மாணவிகள் பங்கேற்று பல பரிசுகளை குவிக்கின்றனர். சமீபத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் நாமக்கல் நேரு யுவகேந்திரா அமைப்புடன் நடத்தப்பட்ட சிலம்பாட்டப் போட்டியில் நமது கல்லூரி மாணவி சத்யபிரியா முதலிடம் பெற்று சிறப்பு செய்தார். மகளிர்கான சுய தொழில் பயிற்சி ஆக சோப்பு தயாரித்தல் ஷாம்பு தயாரித்தல் சலவை சோப்பு தயாரித்தல் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டிற்காக பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.தேசிய அளவில் நடத்தப்படுகின்ற தேசிய திறனாய்வு போட்டியில் டிஎஸ் கீர்த்தனா மற்றும் மஞ்சுளா இரண்டு மாணவிகள் தேசிய அளவில் முன்னிலை பெற்று பரிசு பெற்றனர்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகளில் மற்றும் பெரியார் பேருந்து நிலையம் நடைபெற்று வரும் பணிகளை ஆணையாளர் . ச . விசாகன் , ஆய்வு மேற்கொண்டார் அருகில் நகரப் பொறியாளர் . அரசு உடன் உள்ளார் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கச்சத் தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்., மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இன்று மாலை தொடங்கும் இந்தாண்டு விழாவில் பங்கேற்க இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 72 விசைப்படகுகள் மூலம் 2,510 பேர், 24 நாட்டுப் படகுகளில் 371 பேர் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர்.திருவிழா சென்ற பக்தர்களை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ. வீர ராகவராவ் வழியனுப்பி வைத்தார்.
கச்சத்தீவு சென்ற பக்தர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள் பயணத்தின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் சரக டிஐஜி ரூபேஷ் குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார் ஆகியோர் அறிவுறுத்தினர்.கச்சத்தீவு சென்ற பக்தர்களுக்கான குடிநீர், பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்காலிக கூடாரங்கள், இறங்கு துறை, மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை இலங்கை கடற்படையினர் செய்தனர். பக்தர்களின் பாதுகாப்புக்காக தற்காப்பு கவசம் மற்றும் மீட்பு குழு, மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 2,900 பேர், கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார், நெடுந்தீவு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்பதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இன்று (மார்ச் 6) மாலை கொடியேற்றத்தை தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை, திருப்பலி, புனித அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. நாளை (மார்ச் 7) காலை 9 மணிக்கு சிறப்பு வழிபாடு, திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
by ஆசிரியர்
written by ஆசிரியர்
இந்தியா முழுவதும் CAA, NRC, NPR, க்கு எதிராக பல பல்கலைக்கழகங்களிலும் பல ஊர்களிலும் தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
அதைப்போல் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் இன்று (06/02/2020) CAA, NRC, NPR, போன்ற சட்டத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள்.
இப்போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்புகளைப் பதிவு செய்தார்கள். இந்த போராட்டத்திற்கு கீழக்கரை டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு பனியில் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டார்கள்.
கீழக்கரையிலிருந்து எஸ்.கே.வி.சுஹைபு
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியனுக்கே.விசாரணையா. வீணர்களே மதுரை மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபப்பு
by mohan
written by mohan
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.கடந்த 19-ந்தேதி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது கிரேன் விழுந்து உதவி இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன், லைகா நிறுவனம், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் உள்ளிட்ட 4 பேரின் மீது உயிரிழப்பு ஏற்படுத்துதல், கவனக்குறைவாக இருந்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி அவரிடமும் இரண்டு மணி நேரம் விசாரணை நடைபெற்றது. இதை கண்டித்து மதுரை மக்கள் நீதி மய்யம் கட்சி மற்றும் மாநகர் கமலஹாசன் ரசிகர்கள் சார்பாக இந்தியனுக்கே விசாரணையா வீணர்களே என்ற தலைப்பில் வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து இதுதான் தமிழனின் கெத்து. குனிந்து கும்பிடு போடும் முட்டாள் அரசியல்வாதிகளே முடிந்தால் களத்தில் வந்து மோது இல்லை தமிழ்நாட்டை விட்டு ஓடு என்ற வாசங்கள் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
உலகின் முதல் விண்வெளி வீராங்கனை வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா பிறந்தநாள் இன்று (மார்ச் 6,1937)
by mohan
written by mohan
சோவியத்தொன்றியத்தின் ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்றடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார். இவர் வத்தோக்கு 6 விண்கலத்தில் 1963 சூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு மூன்று நாள்களுக்குச் சற்றுக் குறைவாகத் தங்கியிருந்து வெற்றிகரமாகத் திரும்பினார்.வாலண்டினா விளாடிமிரோவ்னா தெரேஷ்கோவா (Valentina Vladimirovna Tereshkova) மத்திய ரஷ்யாவில் யாரோஸ்லவ் ஒப்லாஸ்ட் பிரதேசத்தில் மார்ச் 6,1937, பிறந்தார். 1961ஆம் ஆண்டு ரஷ்யா சோவியத்தொன்றியத்தைச் சேர்ந்த யூரி ககாரின் மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மாந்தர் என்ற பெருமையைப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாகப் பெண் ஒருவரை விண்ணுக்கு அனுப்ப சோவியத்து ஒன்றியம் முடிவு செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்தன. இறுதிக் கட்டமாக நான்கு பெண்கள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். மிகக்கடினமான பயிற்சிகளுக்குப் பிறகு 25 வயதான வாலண்டினா தெரேஷ்கோவா தேர்வு செய்யப்பட்டார்.
வாஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 சூலை 16ஆம் நாள் வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தைச் சுற்றி 48 முறைகள், 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பெருமையையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.சூன் 19ஆம் நாள் விண்கலம் பூமிநோக்கிப் பாய்ந்து வந்தபோது, தரையிறங்கும் முன்பே பாராசூட்டில் இருந்து குதித்து, பாதுகாப்பாக இறங்கினார். ‘சோவியத்தொன்றியத்தின் வீராங்கனை’ என்ற பதக்கத்துடன் ‘இலெனின் விருது’, வேறு பல விருதுகள் எனக் குவிந்தன. இந்த வெற்றிகளைனைத்தையும் பொதுவுடைமைக் கட்சிக்கு அருப்பணித்தார் வாலண்டினா.நம் நிலாவின் மறு பக்கத்தில் ஒரு மோதல் பள்ளதிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சந்திரனின் பெயரளவில் குடியேறிய முதல் பெண்மணியும் இவர்தான். உண்மையில் விண்வெளி பயணம் அவருக்கு மகிழ்ச்சியாக இல்லையாம். உடனடியாக வீடு திரும்ப வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கூறினார். இவர் எழுபதாவது வயதில் அதிபர் புதின் மளிகையில் விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார். நிகழ்ச்சியில் மத்தியில் தனக்கு செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளதாக வெளிப்படுத்தினார்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
பாலக்கோடு பகுதியில் கோடைவெயில் தாக்கத்தால் மாபூக்கள் , மாங்காய் பிஞ்சு உதிர்வு மகசூல் பாதிப்பால் விவசாயிகள் கவலை!
by Askar
written by Askar
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கோடை வெயில் மற்றும் வறட்சியினால் மாபூக்கள், மாங்காய் பிஞ்சுகள் உதிர்ந்து வருவதால் மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம்,ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி,குண்டாங்காடு போன்ற பகுதியில் செந்துரா,பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவ,நீலம், பங்கன்பள்ளி போன்ற 30க்கும் மேற்பட்ட மாம்பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இங்கு விளையும் மாம்பழங்கள் உள்ளநாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதே போல் மா வகைகளை கொண்டு மாங்கூழ் தயார் செய்ய 10க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் இயங்கி வருகின்றது. ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் மாம்பூக்கள் பூத்து குலுங்க தொடங்கியுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் வறட்சியின் காரணமாக மாபூக்கள் குறைந்த அளவே பூத்து உள்ளது. மேலும் இப்பகுதியில் கோடை வெயில் தாக்கம் மற்றும் கடுமையான வறட்சியினால் மாம்பூக்கள் கருகி கீழே விழுகின்றன. இதனால் நடப்பாண்டில் மா உற்பத்தி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இப்பகுதியில் நீர்பாசன திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
தமிழக ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் எந்த நிலையில் உள்ளன? மக்களவையில் தயாநிதிமாறன் கேள்வி!
by Askar
written by Askar
தமிழக ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் எந்த நிலையில் உள்ளன? மக்களவையில் தயாநிதிமாறன் கேள்வி!
தமிழக ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டநிலை குறித்தும், 2020ல் தொடங்கப்பட உள்ள இத்திட்டங்கள் பற்றியும் மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் நேற்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதன் விவரம் வருமாறு:
கடந்த 2015ல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, தமிழகத்தில் இதன் நிலை பற்றி நகரங்கள் வாரியாக விரிவாக தெரிவிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை திட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கான காரணம் என்ன? அதை நகரங்கள் வாரியாக விரிவாக தெரிவிக்கவும்.
ஸ்மார்ட் சிட்டிகளில் குழாய்கள் மூலம் காஸ் விநியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்துவதின் தற்போதைய நிலைமை என்ன?
தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் 2020ல் அமல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் என்ன? அவற்றை முடிப்பதற்காக திட்டமிடப்பட்ட தேதிகள் ஆகியவற்றை நகரம் வாரியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தயாநிதி மாறன் கேட்டுள்ளார்.
இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்துள்ள பதிலில் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, கோயம்புத்துர், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 11 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அமல்படுத்தப்படுகின்றன. இவற்றுக்கு மொத்தம் ரூ.1464.56 கோடி மதிப்புள்ள 33 ஒப்பந்தங்கள் (டெண்டர்) வெளியிடப்பட்டு உள்ளன. ரூ.11,795.87 கோடிக்கு மொத்தம் 237 திட்டங்களுக்கு பணி உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் மொத்தம் 96 திட்டப்பணிகளில் ரூ.648.45 கோடி மதிப்புள்ள பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இந்த 11 நகரங்களுக்கான மொத்த திட்டப் பணிகளின் எண்ணிக்கை 366. மொத்த செலவுத் தொகை ரூ.13,908.88 கோடி.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை அமல்படுத்துவதில் எந்த தாமதமும் இல்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்த நகரத்திலும் குழாய் மூலம் காஸ் விநியோகிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. சென்னை கோயமுத்தூரில் முதல் சுற்றுப் பணி அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மதுரை, சேலம், வேலூர் மற்றும் தஞ்சாவூரில் 2வது சுற்றுப் பணி 2022, பிப்ரவரிக்குள்ளும் தொடங்கப்படும். திருப்பூர், நெல்லை, திருச்சி மற்றும் தூத்துக்குடியில் 3ம் சுற்றுப் பணி 2022 ஜூன் மாதத்துக்குள்ளும், ஈரோட்டில் 4வது சுற்றுப் பணி 2023 ஜனவரியிலும் தொடங்கப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் தொடங்கப்படும் தேதியிலிருந்து 5 ஆண்டுகளுக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஹர்தீப் சிங் பதிலளித்துள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
இந்தியா எங்கள்தேசம்!
இஸ்லாம் எங்கள் சுவாசம்!
கவிஞர்,கப்ளிசேட்
பகுதி-1
புது டெல்லி…!
2012 ஏப்ரல் மாதத்தின்
பரபரப்பான
மாலைப்பொழுது..!
சண்டீகரின் ராணுவத்தளங்களில்
இருந்து இரண்டு படைப்பிரிவுகள்
வலிமையான டேங்கர்களோடு
(Tankers)
புதுடெல்லியை நோக்கி
புறப்பட்டன.
டெல்லியில் அதற்கான
எந்த அவசியங்களும்
நிகழவிலலை.
ராணுவ படைப்பிரிவுகள்
வருமளவிற்கு எந்த
சிறப்பு நிகழ்வுகளும்
நடைபெறவில்லை.
அந்தப்படை
பிரிவினருக்கு
அவர்களின் விசுவாச
மேலிடத்திலிருந்து
இடப்பட்ட கட்டளை
அதிர்ச்சியானது.
ஒருபிரிவு பாராளுமன்றத்தை
நோக்கியும்
மற்றொன்று
குடியரசுத்தலைவர்
மாளிகையை நோக்கியும் சென்று
இரண்டையும் கைப்பற்றி பிறகு,
தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தையும்
கைப்பற்றி ,
ஒரு சிறுராணுவப்புரட்சி
மூலம் நாட்டை கைப்பற்றி அரசாங்கத்தை
நிறுவுவதே நாக்பூரின்
இலக்கு.
இதனை மோப்பம் பிடித்த உளவுநிறுவனங்கள்
அன்றைய பிரதமர்
மன்மோகன் சிங் அவர்களுக்கு தகவல்
தெரிவித்தன.
உடனடியாக அன்றைய
தரைப்படைத்
தலைவரிடம் விபறம்
கேட்கப்பட்டது.
அரசுமுறைப்பயணமாக
மலேசியாவிலிருந்த
அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக ஒரு தந்திரமான ஆலோசனையை
டெல்லி காவல்துறைக்கு வழங்கினார்.
உடனடியாக டெல்லி
காவல்துறை ரோடுகளில் தடுப்புகளை ஏற்படுத்தி
எல்லா வாகனங்களையும்
சோதிக்க ஆரம்பித்தனர்.
ரோடுகளில் வாகனங்களின்
குவியலால் ரோட்டில்
எந்த வாகனமும் சட்டென நகரமுடியவில்லை.
டேங்கர்களும்,
ராணுவப்பிரிவும் என்ன செய்தன?
இறைவன் நாடினால்
தொடர்ந்து பேசுவோம்…!
(04.04.2012 இந்தியன்* *எக்ஸ்பிரஸ் ஆங்கில
பத்திரிக்கையின் டெல்லி பதிப்பில் வெளியான செய்தியை
ஆதாரமாக வைத்து
எழுதிப்பட்டது.)
கப்ளிசேட்
6.03.20
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
“வாசிப்பே சுவாசிப்பு”.. புத்தக வாசிப்பின் பழக்கதை அழிவின் விளிம்பிருந்து காக்க முயற்சி எடுத்த கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தினர்…
by ஆசிரியர்
written by ஆசிரியர்
நவீன யுகம், டிஜிடல் மயம், அவசர உலகம் என்ற பரபரப்பில் புத்தகம் வாசித்தல் என்ற பழக்கமே மறைந்து விடுமோ என்ற சூழலில் அங்கும், இங்குமாக வருடம்தோறும் புத்தக கண்காட்சிகளே மனதுக்கு ஆறுதல் அளிக்கும் விசயம். கீழக்கரை போன்ற ஊர்களில் மிகவும் பரபரப்பாக இருந்த அரசு நூலகங்கள் கூட குறுகி சிறிய அறையில் மூடையில் புத்தகங்களை கட்டி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கீழக்கரை ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தினர் வாசிப்பு பழக்கத்தை ஊக்கவிக்கும் வண்ணம் இன்று (05/03/2020) தபால் நிலைய சாலையில் அருகில் “ஹிதாயத் நூலகம்” என்ற பெயரில் பொது மக்கள் நலன் கருதி தொடங்கியுள்ளனர்.
இந்நூலக திறப்பு விழாவில் ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் துணை செயலாளர் வாசிம் அக்ரம் வரவேற்புரை வழங்கினர். Fashion Scope இஸ்மாயில் நூலகத்தை திறந்து வைத்து வரவேற்புரையாற்றினார். ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் ரைசுல் இஸ்லாம் நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
செங்கம் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்களை செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்..
by Askar
written by Askar
செங்கம் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் சுற்றித்திரிந்த கல்லூரி மாணவர்களை செங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்..
செங்கம் பேருந்து நிலையத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்தால் செங்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த செங்கம் காவல் துறையினர் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா தலைமையில் காவல்துறையினர் கல்லூரி மாணவர்கள் கைது செய்தனர் .இரு கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையின் போது பஸ்டே கேக் வெட்டி கொண்டாடினார்கள் என்று தெரியவந்தது. பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையிலும், இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது கல்லூரி மாணவர்கள் பேருந்து நிலையத்தில், ரயில் நிலையத்தில் மக்கள் கூடும் இடத்தில் கேக் வெட்டி கொண்டாடுவது வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.
செய்தியாளர், செங்கம் சரவணகுமார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியை அடுத்துள்ள புள்ளநேரி கிராமத்தில் வைரமுருகன்-சௌமியா தம்பதிக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இரண்டாவது பெண் குழந்தை பிறந்த நிலையில் கடந்த 2ம் தேதி குழந்தை உயிரிழந்ததாக கூறி பெற்றோர் குழந்தையை வீட்டின் அருகே புதைத்துள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினரிடம் அளித்த தகவலின் பேரில் செக்கானூரணி போலீசார் நடத்திய விசாரணையில் 30 நாள் ஆன பெண் சிசுவை பெற்றோர் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து உசிலம்பட்டி வட்டாட்சியர் செந்தாமரை, டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான குழு குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி பிரேத பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
உசிலை சிந்தனியா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ பயிற்சி பள்ளியில் பிப்.10 முதல் பிப். 29 வரை பேரிடர் மேலாண் மீட்பு பயிற்சி நடைபெற்றது. இதில்ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை போலீகாரர்கள் விக்னேஸ்வரன் பிசி 711, முத்தமிழன் பிசி 591, கார்த்திக் பிசி 574, ராஜபாண்டி பிசி 722, கபில்தேவ் பிசி 696 ஆகியோர் உள்பட 13 கடலோர காவல் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் ராமநாதபுரம் போலீஸ்காரர் விக்னேஸ்வரன் பிசி 711, ஒட்டு மொத்த போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் கோப்பையை தட்டிச் சென்றார்.பயிற்சி முடித்து திரும்பிய போலீஸ்காரர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஆயிரத்து இருபத்தி நான்கு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா…
by Askar
written by Askar
புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ஆயிரத்து இருபத்தி நான்கு மாணவ மாணவியர்களுக்கு பட்டமளிப்பு விழா…
திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் இன்று (மார்ச் 5,2020) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருத்தினராக பங்கேற்ற பாரதிதாசன் பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர் எஸ். சீனிவாசராகவன் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற மாணவமாணவியர்களுக்கு இயற்கையோடு இணைந்து வாழ பழகுங்கள் என வேண்டுகோள் விடுத்தார். 1967ல் தொடக்கப்பட்ட இக்கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இணைவுபெற்ற கல்லூரி) 1983ல் தமிழகத்திலே முதன் முதலில் இளநிலை கணிணி அறிவியல் பட்ட படிப்பை அறிமுகப்படுத்திய பெருமை பெற்றுது. அறிஞர் அண்ணா, அப்துல்கலாம் உள்ளிட்ட மிகப்பெரிய இந்திய ஆளுமைகளை இக்கல்லூரிக்கு நிர்வாகம் அவ்வப்போது அழைத்து வந்து இங்கு பயிலும் மாணவ மாணவியர்களை ஊக்கப்படுத்தியிருப்பது பெருமைக்குரியது.
இன்று தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக நூல்களை வாசிப்பதும், நூலகங்கள் செல்வதும் குறைந்து விட்டது. எத்தனை தொழில்நுட்ப வளர்ச்சிகள் வந்தாலும் ஒரு துறையில் உள்ள மனித ஆளுமையையும், மூலத்தையும் அகற்றிவிட முடியாது. இணையத்தில் (இ-நூலகம்) உள்ள அத்தனை தகல்வகளும் உறுதி செய்யப்பட்டவையா, உண்மைத் தன்மையுடையவையா, நம்பகத்தன்மை உடையனவா என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நூல்கள் அப்படி அல்ல. அவைகள் நம்பகத்தன்மையுடையவை, உறுதி செய்யப்பட்ட தகவல்களை கொண்டவை. எனவே இந்த தலைமுறையினர் நூல்களை வாசிக்கிற பழக்கத்தை மேம்படுத்தி அறிவை புதுப்பிக்க வேண்டும். நாட்டில் பெண்கள் அதிகமாக கல்வி பெறுகிறார்கள். ஆனால் குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட மற்ற காரணிகளால் அவர்களால் உரிய வேலைவாய்ப்புக்கு செல்லமுடியவில்லை. ஆனால் கல்வியறிவு பெற்ற பெண்களால் குடும்பம் நல்ல வளர்ச்சி பெறும். சதுரங்கம், டென்னிஸ் விளையாட்டைச் சார்ந்த விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் மகேஸ்பூபதிக்கு அவர்களுடைய தாயார் தான் உந்துசக்தியாக இருந்துள்ளனர்.
வசதியாக வாழ்வதை விட இயற்கையோடு வாழ்தல் சிறந்தது. இயற்கையோடு வாழும் போது தான் மண்ணின் மரபுகளும், இன மற்றும் மொழி அடிப்படையிலான கலச்சாரங்களும் காப்பற்றப்படும். நமது மரபுகளும், கலாச்சாரங்களும் தான் உலகளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறது. வேளாண்மையை கைவிட்டு வருகிறோம், நான் இளைஞராக இருந்து போது வீடுகளில் சுய தேவைக்கான காய்கறி தோட்டங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இப்போது யாரும் அது போன்று தோட்டங்களை வளர்ப்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் 25 மரங்களை வளர்த்து வனங்களை உருவாக்க வேண்டும். பட்டம் பெறுகிற ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த துறை வழியாக தங்களுடைய பகுதியின் வளர்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை வழங்குவதன் மூலம் நம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கமுடியும்.
இந்தக் கல்லூரி வழியாக பட்டங்களை பெற்று வாழ்வில் சிறப்படைந்திருக்கிற தாங்கள் அனைவரும் இந்தக் கல்லூரி மற்றும் இங்கு படிக்கிறவர்களுக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும் இருக்க வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாக குழுத் தலைவர் பொன் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார்.
செயலர் பொன் ரவிசந்திரன் வரவேற்றார். முதல்வர் பொன் பெரியசாமி கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசித்தார். நிர்வாக குழவைச் சேர்ந்த பொன். சிவனேஸ்வரி, தேன்மொழி தங்கராஜா, லோகநாதன், துணை முதல்வர் எஸ். குமாரராமன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம், புல தலைவர்கள் தமிழ்மணி, சசிகுமார், டி. விஜிசரல் எலிசபெத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பாரதிதாசன் பல்கலைக் கழக அளவில் இளங்கலை விலங்கியல் பட்ட படிப்பில் முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கம் பெற்ற ஜி. விஜய் உள்பட 20 பல்கலை தர வரிசை பட்டியல்களுடன் 840 இளங்கலை பட்டம், 184 முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் உள்பட மொத்தம் 1024 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர் டி.ஜெயபிரகாசம், பெற்றோர் கழக தலைவர் ராமதாஸ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், துறை தலைவர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா வைரஸ் பற்றிய தவறான தகவல்கள் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளதால் அந்த வைரஸ் பற்றிய முழு தகவல்கள் மற்றும் அவை வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காக நம் தமிழக அரசு 24 மணி நேர பொது சேவை மையங்களை தொடங்கியுள்ளது. அதன் உதவி எண்களான 044-29510400, 04429510500, 9444340496, 8754448477 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தேவையான அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம் என மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் தமிழக,கேரள இஸ்லாமிய அமைப்பினர் கூட்டாக சந்திப்பு..
by Askar
written by Askar
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் தமிழக,கேரள இஸ்லாமிய அமைப்பினர் கூட்டாக சந்திப்பு..
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர்கள் மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை இன்று (05.03.2020) சென்னையில் சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக முதன் முதலில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்த மக்கள் நீதிமய்யத்திற்கும், அதன் தலைவர் கமல்ஹாசனுக்கும் நன்றி தெரிவித்தனர்.
மேலும் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில் அமைவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கமல்ஹாசனிடம் கேட்டுக் கொண்டனர். அப்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பதாக உறுதி கூறினார்.
மேலும் கூறிய மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் உறுதியாகவும், வலிமையாகவும் நடந்திட வேண்டும்.அதே நேரம் எந்த வகையிலும் வன்முறை புகுந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இந்த சந்திப்பில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் இறையடியார் காஜா முகைதீன், அஹ்லுஸ்ஸூன்னத் ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அக்ரம்கான், அமைப்பாளர் மெளலவி சுலைமான் மன்பயி, மாநில உலமாக்கள் பேரவை மெளலவி நஜீர் அஹமது காசிமி,சுன்னத் ஜமாத் பேரமைப்பு மெளலவி சையத் பிலால் ஆமிரி, ஹிமாயத்துல் முஸ்லிமீன் எம்.எஸ்.அப்துல்லா, ஜெ.முனீர்ஜான், திருவொற்றியூர் ஜாமியா மஸ்ஜித் செயலாளர் டாக்டர் சதக்கத்துல்லா, புளியந்தோப்பு மஸ்ஜித் கூட்டமைப்பு மெளலானா சிராஜுதீன், சுன்னத் ஜமாத் பேரியக்கம் எம்.பி.நாசர், கீழக்கரையைச் சேர்ந்த சாகுல்ஹமீது,நிஜாம், முஜாஃபிர்,பள்ளி முதல்வர் ஷெரிஃபா,AMR ரபீக் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில் சென்னை மலபார் முஸ்லிம் அசோசியேசன் ஆகிய தமிழக,கேரள முஸ்லிம் அமைப்பினர்கள் கூட்டாக கலந்து கொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருடன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ரோட்டரி சார்பில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் ராமநாதபுரம் வருகை: டிஐஜி., வரவேற்பு
by mohan
written by mohan
போலியோவை உலகை விட்டு ஒழிக்க ரோட்டரியின் பங்கு மகத்தானது. போலியோ சொட்டு மருந்திற்கான செலவை கடந்த 30 ஆண்டுகளாக ரோட்டரி ஏற்றுக் கொண்டு உள்ளது. போலியோ ஒழிப்பிற்கு 1,800 மில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச ரோட்டரி இதுவரை செலவு செய்துள்ளது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தவிர மற்ற நாடுகளில் போலியோ ஒழிக்கப்பட்டு விட்டது. நம் அண்டை நாடுகளில் போலியோ இருப்பதால் நமக்கும் அது மீண்டும் வர வாய்ப்புகள் அதிகம். எனவே, போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இரண்டு வாகனங்கள் மேற்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியாக பிப்.23 ல் புறப்பட்டன. அந்த வாகனங்கள் நூறு நாள் விழிப்புணர்வு பிரசாரத்திற்கு பிறகு காஷ்மீரில் இருந்து கராச்சிக்கு ஒன்று, காபூலுக்கு ஒன்று நன்கொடையாக வழங்கப்பட உள்ளது. இன்று மாலை ராமநாதபுரம், வந்த இந்த விழிப்புணர்வு வாகனத்தை ராமநாதபுரம் அரண்மனை முன் ராமநாதபுரம் டிஐஜி., ரூபேஷ் குமார் மீனா, ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் சின்னத்துரை அப்துல்லா கலந்து கொண்டு வரவேற்றனர். இதில் ரோட்டரி ஒருங்கிணைப்பாளர் ஜெ.தினேஷ் பாபு, முன்னாள் துணை ஆளுநர்கள் ஜெ.சுகுமாறன், பார்த்த சாரதி, பி.ஆர்.என்.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் நாகராஜன், உறுப்பினர்கள் செங்குட்டுவன், அருண். இன்ஜினியர் பாலா, அண்ணாதுரை, வழக்கறிஞர் ஜகத் இளவரசன், ராதாகிருஷ்ணன், கீழக்கரை ரோட்டரி நிர்வாகி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்:-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை!
by Askar
written by Askar
கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, மின் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான ஆன்லைன் தேர்வை தமிழில் நடத்த மின்துறை அமைச்சர் மறு அறிவிப்பு வெளியிட வேண்டும்:-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை!
“தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 1300 மின் கணக்கீட்டாளர்கள் (ASSESSOR) பதவிக்கான ஆன்லைன் தேர்வு ஆங்கிலத்தில் நடைபெறும்” என்று அ.தி.மு.க. அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே இந்தி படித்தவர்களை எல்லாம் உதவிப் பொறியாளர்களாக நியமித்த முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி தலைமையிலான அரசு; அந்த மோசமான முன்னுதாரணத்தை தொடர்ந்து இப்போது, வீடு வீடாகச் சென்று மீட்டர் ரீடிங் எடுக்கும் கணக்கீட்டாளர்கள் பதவிக்கான தேர்வினை, முழுவதும் தமிழில் நடத்திட மறுப்பது; வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு, பல வருடங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழ்படுத்தும் திட்டமிட்ட சதியோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
இந்தத் தேர்வுக்கான அறிவிப்பில், “இப்பதவிக்கு விண்ணப்பிப்பவருக்குக் கட்டாயம் தமிழ் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்” – “தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்” – “தமிழ்மீடியம் படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் வழங்கப்படும்” என்றெல்லாம் “ஒப்பனைக்கு”க் குறிப்பிட்டு விட்டு, “ஆன்லைன் தேர்வு மட்டும் முழுக்க முழுக்க தமிழில் நடைபெறாது” என்று அறிவிப்பது, முற்றிலும் அநீதியான தேர்வு முறையாகும்.
தவறான கேள்விகளுக்கு “நெகடிவ் மதிப்பெண்” வழங்கும் முறையும், படித்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற இளைஞர்களை அடியோடு புறக்கணிக்கும் செயலாகும்.
தேர்வில் வெற்றி பெறுபவர்களில், “ஒரு பதவிக்கு இருவர் என்ற அளவில் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்புப் பணிக்கு அழைக்கப்படுவார்கள்” என்பது, முறையற்ற – எவ்வித நியாயமும் இல்லாத அளவுகோலாக இருக்கிறது.
மின் வாரியப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்துவது, ஏதோ “மின் கொள்முதல்” போன்றதல்ல; மாறாக, வேலையில்லாத் திண்டாட்டத்தில் தவித்துக் கொண்டிருக்கும் கிராமப்புற பட்டதாரி இளைஞர்களுக்கு வாழ்வளிக்கும் தேர்வு என்பதை மனதில் நிலை நிறுத்தி, தமிழ்நாட்டில் தமிழில் ஆன்லைன் தேர்வு நடத்துவது முக்கியம், அதுவே பொருத்தமானது, அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியது, என்பதை மின்துறை அமைச்சர் திரு. தங்கமணி உணர்ந்து, ஏற்பட்டுவிட்ட தவறை உடனடியாகத் திருத்திக் கொண்டு, மறு அறிவிப்பு வெளியிட முன்வர வேண்டும்.
ஆகவே, கிராமப்புற பட்டதாரிகளும், நகர்ப்புறங்களில் – ஏழ்மையான சூழ்நிலையில் பட்டப் படிப்புகளை முடித்துள்ள இளைஞர்களும், மின் கணக்கீட்டாளர் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறும் வகையில், இந்தப் பதவிக்குரிய ஆன்லைன் தேர்வினை முழுமையாகத் தமிழில் நடத்திட வேண்டும் என்றும், தவறான கேள்விகளுக்கு “நெகடிவ்” மதிப்பெண் வழங்கும் முறையைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
கிராமப்புறப் பட்டதாரிகளின் நலன் கருதி, முதலமைச்சரும் மின்துறை அமைச்சருக்கு உரிய ஆணை வழங்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஒலிபெருக்கி சத்தத்தால், தேர்வு நேரத்தில் மாணவர்கள் படிப்பு பாதிப்பதாக பொதுமக்கள் புகார்..
by Askar
written by Askar
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை இ. காட்டூர் பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகின்றன. இவ்விழாவினையொட்டி சிறப்பு நடன நிகழ்ச்சி 4 ஆம் தேதி புதன்கிழமை அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில்பெண்கள் நடனமாடும் மேடைபகுதிக்கு பார்வையாளர்கள் யாரும் கிட்டே வராத அளவிற்கு சீமை முள் செடிகளை வெட்டி போட்டு வைத்துள்ளனர். மேலும் 50 க்கும் மேற்பட்ட அதிரவைக்கும் ஒலிபெருக்கியை வைத்துள்ளனர். பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வு நேரம் என்பதால் மாணவர்களின் கவனம் சிதறக்கூடும் என்றும் கிராமம் தோறும் நடைபெறும் மாரியம்மன், காளியம்மன் மற்றும் உள்ளூர் திருவிழாக்களுக்கு இந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஒலிபெருக்கியை வைப்பதும், நடன நிகழ்ச்சி வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென சமூக சிந்தனையாளர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் மகுடஞ்சாவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை வாய்மொழி உத்தரவு பிரபிப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
You must be logged in to post a comment.