திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது துத்திப்பட்டு சுடுகாட்டு பகுதியில் சுற்றி திரிந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது அவரிடமிருந்த கஞ்சா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து தொடர் விசாரணையில் இவர் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த சைபுல்லா என்பதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து பிடிப்பட்ட நபரை உமராபாத் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Category:
செய்திகள்
உலக பேரிடர் மீட்பு தினம் தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி தாசில்தார் தலைமையில் நடந்தது.உலக பேரிடர் தணிப்பு தினத்தை முன்னிட்டு வீரகேரளம்புதூர் வருவாய்த் துறை, சுரண்டை தீயணைப்பு நிலையம், மற்றும் தென்காசி இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பேரிடர் கால மீட்பு குறித்து பயிற்சி விளக்கம் வீகேபுதூர் தாசில்தார் முருகு செல்வி தலைமையில் நடந்தது.தென்காசி மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி சேர்மன் ரமேஷ், துணை தலைவர் முத்துகிருஷ்ணபேரி இந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பீட்டர் சாம் அல்போன்ஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை ஆர்ஐ மாரியப்பன் வரவேற்றார். சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் தீவிபத்து, வெள்ளம், கட்டிட இடிபாடுகள், விபத்து, இயற்கை சீற்றங்கள், உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மற்றும் மருத்துவ துறையினர் சேவைகளை பெறுவது, தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு தற்காத்துக் கொள்ளுதல், அவசர முதலுதவி பெறுதல் குறித்து கூறி செய்முறை விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன், சாமி, ராஜேந்திரன், மாடசாமி, உலகநாதன், திலகர், வெள்ளைப்பாண்டி, பொன்ராஜ், உதயபிரகாஷ், விஏஓக்கள் டெல்பின் சோபியா, தர்மராஜ், பாலு, வெள்ளைப்பாண்டி, விஜி, கிராம உதவியாளர்கள் பரமசிவன், ஜேம்ஸ், கற்பகம், மாரியம்மாள், அரசு போக்குவரத்து கழக அலுவலர் சங்கரன், கண்ணன், குமார், ரெட்கிராஸ் சொசைட்டி நிர்வாகிகள் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் ரெட்கிராஸ் செயலாளர் நன்றி கூறினார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் நோய் வாய்ப்பட்ட நிலையில் சுற்றி வந்த பெண் யானை உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணை…
by mohan
written by mohan
கல்லிடைக்குறிச்சி அருகிலுள்ள பொட்டல் மலைப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சுற்றி வந்த பெண் யானை இறந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகில் உள்ள பொட்டல் மலை அடிவாரத்தில் 80 அடி கால்வாய் அருகில் பெண் யானை ஒன்று கடந்த ஒரு வார காலமாக சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தெற்கு பாப்பாங்குளம் பகுதியில் உள்ள முத்துக்குட்டி என்பவருடைய விளைநிலத்தில் அந்த பெண் யானை இறந்து கிடந்தது.இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஓம்கார கொம்பு மற்றும் அம்பாசமுத்திரம் வனச்சரகர் (பொறுப்பு) சரவணகுமார், பாபநாசம் வனச்சரகர் பரத், கால்நடை மருத்துவர் மனோகரன், ஆகியோர் இறந்த பெண் யானையை பார்வையிட்டு நோய்வாய்ப்பட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.பின்னர் இறந்த பெண் யானையை டிராக்டர் மூலம் மணிமுத்தாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய கொண்டு செல்லப்பட்டது.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
by mohan
written by mohan
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளத்தில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளி அரங்கில் வேலூர் , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக பள்ளி கல்வித்துறை கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேடையில் 20 பள்ளி தாளாளர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல். மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் காட்பாடி அரசு மேல்நிலைப்பள் ளி பெற்றேர் ஆசிரியர் சங்க தலைவர் எஸ்ஆர்கே ஆப்பு காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் சோளிங்கர் எம்எல்ஏ சம்பத் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வி.ராமுவேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் எம். ஆனந்தன் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மினி பஸ் ஸ்டாண்ட் அருகே தியாகி இமானுவேல் சேகரனார் ஆட்டோ நிலையம் தொழில் நலச்சங்கம் தலைவர் பாண்டி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் பாலசுப்பிரமணி வரவேற்று பேசினார். செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். விழாவில் பெயர் பலகையும், உறுப்பினர் அட்டையும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சங்க சட்ட ஆலோசகர் சங்கர் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். இவ்விழாவின் துணைச் செயலாளர் முனியாண்டி , பொருளாளர் சுரேஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் செல்வகுமார், காமாட்சி, நவநீதகிருஷ்ணன், பாண்டி, கார்த்திக் ,நாகேந்திரன், சந்தனகுமார் ,திருப்பதி, சுந்தரம், மகாலிங்கம் ,சிவகுமார், சரவணகுமார் ,மணிகண்டன், சரத்குமார் ,நாகேந்திரன், ராஜேந்திரன் , ராஜ்குமார், தங்கேஸ்வரன் , பாண்டித்துரை, செல்வகுமார், பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
கொரோனா ஊரடங்கு மீறி பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்த பள்ளி நிர்வாகம் – மாணவர்களை கட்டாயபடுத்துவதாக குற்றச்சாட்டு.
by mohan
written by mohan
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்திவருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகத நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான பராமரிப்பு பணிகளை சில பள்ளி நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துவரும் காரணத்தால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடகூடாது என்ற அடிப்படையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாணி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொது தேர்வு எழுத கூடிய மாணவர்களை பள்ளிக்கு கட்டாயம் வர கூறி தொலைபேசி மூலமாக கட்டாயபடுத்துவதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக மதுரையில் இது போன்ற தனியார் பள்ளிகள் கொரோனா கால கட்டத்தில் திறந்திருப்பதும் அதற்கான ஆதார வீடியோக்கள் வெளியாவதும் மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை கோரிப்பாளையத்தில் மின்கம்பிகளுக்கு இடையூறாக வளர்ந்துள்ள பெரிய மரக்கிளைகள் மின்வாரிய ஊழியர்களால் வெட்டி அகற்றப்பட்டது. அகற்றப்பட்ட கிளைகளை அப்படியே சாலையில் போட்டு விட்டு சென்றதால் வாகனங்கள் எதுவுமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் கல்பாலத்தில் இருந்து கோரிப்பாளையம் தேவர் சிலை வரை கடுமையாக இருந்தது. பணிக்கு செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்கள் நெரிசலுக்குள் சிக்கி செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தல்லாகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் தகவல் கிடைத்து விரைந்து வந்து பார்வையிட்டனர். அருகில் மரக்கடைகளிலிருந்து மரம் அறுக்கும் கருவிகளை கொண்டுவந்து துண்டு துண்டுகளாக அறுத்து மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பஸ் ஏற காத்திருந்த பயணிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சரி செய்த தல்லாகுளம் போக்குவரத்து போலீசாரை பாராட்டினர். மின்சார ஊழியர்கள் இதுபோன்று இடையூறாக உள்ள மரம் கிளைகளை அகற்றும் போது வெட்டப்பட்ட மரக்கிளைகளை அகற்றாமல் அப்படியே விட்டுச் செல்வதால் மிகவும் இடையூறு ஏற்படுகிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
சோழவந்தான் அருகே மண்ணாடி மங்கலத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
by mohan
written by mohan
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆன்லைன் மூலமாக நடந்தது முகாமிற்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன் தலைமை தாங்கினார் பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி பால்பாண்டி மாவட்ட இணைச் செயலாளர் சேகர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மன்னாடிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பவுல் முருகன் ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கிளை செயலாளர் திரு முருகன் வரவேற்றார் ஒன்றிய பொறுப்புக் குழு தலைவர் பசும்பொன் மாறன் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கி வைத்தார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜிபி ராஜா உறுப்பினர் கார்டு வழங்கினார் இதில் பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜா என்ற பெரிய கருப்பன் முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபில் ராஜா ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் தனலட்சுமி கண்ணன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன் தனபால் நகரச் செயலாளர்கள் சோழவந்தான் முனியாண்டி வாடிப்பட்டி பிரகாஷ் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வெற்றிச்செல்வன் மாவட்ட பிரதிநிதி பேட்டை கண்ணன் விவசாய அணி இராதாகிருஷ்ணன் முன்னாள் வார்டு உறுப்பினர்கள் எஸ் எம் பாண்டியன் தவமணி தென்கரை சோழராஜன் தேங்கா கடை கௌதம ராஜா உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஒன்றிய பிரதிநிதி காமேஸ்வரன் நன்றி கூறினர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை விவகாரம். ஊராட்சி செயலாளர் வீட்டை அடித்து நொறுக்கிய கிராமத்தினர்.
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் குன்னத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணன் உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக இன்று இருவரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சொந்த ஊரான குன்னத்தூரில் அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்துச்சென்றனர் இந்த நிலையில் குன்னத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணியாற்றி வரும் செயலாளர் வீரணன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இந்நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவருடைய வீட்டை ஊர் பொதுமக்கள் அடித்து நொறுக்கி தீ வைத்துள்ளனர் சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
எண்ணெய் விளக்கின் (ஆர்கண்ட் விளக்கு) வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்தியஅய்மே ஆர்கண்ட் நினைவு தினம் இன்று (அக்டோபர் 14, 1803).
by mohan
written by mohan
அய்மே ஆர்கண்ட் (Aime Argand) ஜூலை 5, 1750ல் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் 10 பிள்ளைகளுள் ஒன்பதாவதாகப் பிறந்தார். இவரது முழுப்பெயர், ஃபிராங்கோயிஸ் பியேர் அமி ஆர்கண்ட். இவரது தந்தையார் ஒரு கைக் கடிகாரம் செய்பவர். அய்மே ஆர்கண்ட் ஒரு மதகுரு ஆகவேண்டும் என அவரது தந்தையார் விரும்பினார். ஆனால் இவருக்கு அறிவியல் மீதே அதிக ஆர்வம் இருந்தது. இதனால், புகழ் பெற்ற தாவரவியலாளரும், காலநிலையியலாளருமான ஹோராஸ்-பெனடிக்ட் டி சோசுரே என்பவரிடம் மாணவராகச் சேர்ந்தார். இவர் தனது இருபதுகளின் பிற்பகுதியில் பாரிசில் இருந்தபோது காலநிலையியல் தொடர்பான பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். பின்னர் இவர் வேதியியல் ஆசிரியராகப் பணியேற்றுக் கொண்டார். வைனிலிருந்து பிராந்தி தயாரிக்கும் முறையை மேம்படுத்திய இவர், தனது சகோதரருடன் இணைந்து வடிசாலை ஒன்றை அமைத்தார்.
1780 ஆம் ஆண்டில், வழக்கமான எண்ணெய் விளக்கில் மேம்பாடுகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார். அடிப்படை யோசனை ஒரு உருளை விக் வேண்டும், இது காற்று வழியாகவும் சுற்றிலும் பாயக்கூடும், உற்பத்தி செய்யப்படும் ஒளியின் தீவிரத்தை அதிகரிக்கும். ஒரு உருளை புகைபோக்கி காற்று ஓட்டத்தை மேம்படுத்தியது மற்றும் தொடர்ச்சியான சோதனைகள் உகந்த செயல்பாட்டிற்கான விகிதாச்சாரத்தை அளித்தன. விக்கை உயர்த்துவதற்கும் குறைப்பதற்கும் ஒரு வழிமுறை சில சரிசெய்தல் மற்றும் தேர்வுமுறை ஆகியவற்றை அனுமதித்தது. ஒளி ஒரு மெழுகுவர்த்தியை விட மிகவும் பிரகாசமாக இருந்தது. (ஐந்து முதல் பத்து காரணி மூலம்), சுத்தமாக எரிக்கப்பட்டது. மெழுகுவர்த்தியைப் பயன்படுத்துவதை விட மலிவானது. 1783 ஆம் ஆண்டில், ஆர்கண்ட் பிரான்சில் மாண்ட்கோல்பியர் சகோதரர்களான ஜாக்-எட்டியென் மற்றும் ஜோசப்-மைக்கேல் ஆகியோரைச் சந்தித்தார் மற்றும் ஒரு சூடான காற்று பலூனைத் தயாரிப்பதற்கான அவரது பரபரப்பான சோதனைகளுடன் நெருக்கமாக ஈடுபட்டார்.
அங்கு இருந்தபோது, அவரது அறிமுகமான அன்டோயின்-அரோல்ட் குயின்கெட், ஒரு ஆரம்ப முன்மாதிரியைக் காட்டியவர். சிறிய மாற்றங்களுடன் விளக்குகளை தானே தயாரிக்கத் தொடங்கினார். மேலும் காப்புரிமை மீறலுக்காக நீடித்த சட்டப் போரை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடினார். வணிக ரீதியான வெற்றியாக இருக்கக்கூடிய விளக்கை வெற்றிகரமாக உருவாக்க பல சிக்கல்கள் கலந்து கொண்டன. அர்காண்ட் அவர்கள் அனைவரையும் பரிசோதித்தார். நடைமுறை சமரசங்களைத் தேடினார். விக்கின் வடிவமைப்பு தயாரிப்பு ஒரு லேஸ்மேக்கரால் தீர்க்கப்பட்டது. சூடான சுடருக்கு அடுத்ததாக பயன்படுத்த வேண்டிய கண்ணாடி வகை இறுதியில் தீர்க்கப்பட்டது. பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான எண்ணெய்களும் சோதிக்கப்பட்டன. அவற்றைப் பயன்படுத்த சுத்திகரிக்கும் முறைகள் பல சோதனைகளுக்கு உட்பட்டவை.
திமிங்கல எண்ணெய் இறுதியில் குடியேறியது. இது இறுதியில் ஒரு முக்கியமான புதிய தொழிலை உருவாக்கியது. விக்கைப் பிடித்து அதை மேலும் கீழும் நகர்த்துவதற்கான வழிமுறை பல மாறுபாடுகளைக் கடந்து சென்றது. எண்ணெய் தேக்கத்தைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் சாலிடர் கூட மென்மையான சாலிடர் மூட்டுகள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விளக்கின் கண்டுபிடிப்பு ஒரே ஒரு கண்டுபிடிப்பைக் கொண்டிருக்கவில்லை, மாறாக முழுமையான பகுதிகளின் மேம்பாடு அனைத்துமே ஒன்றிணைந்து செயல்படுகின்றன. எடிசனின் மின் விளக்கு அமைப்பைக் கண்டுபிடித்ததைப் போலல்லாமல், மீண்டும் நூற்றாண்டு பின்னர் ஒரு விளக்குகளை புரட்சிகரமாக்கியது. ஆர்காண் தனது விளக்கை இங்கிலாந்தில் தயாரிக்க தீர்மானித்தார். விளக்கை தயாரிப்பதற்காக அவர் இறுதியில் வில்லியம் பார்க்கர் மற்றும் மத்தேயு போல்டன் ஆகியோருடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். 1784 ஆம் ஆண்டில், அவர் தனது வடிவமைப்பிற்கான காப்புரிமையைப் பெற்றார்.
ஆர்காண்ட் ஜேம்ஸ் வாட் உடன் நெருங்கிய உறவையும் ஏற்படுத்தினார், அவர் விளக்குகளின் செயல்திறன் குறித்து சில பரிசோதனைகளைச் செய்தார் மற்றும் அவரது நீதிமன்றப் போர்களை நடத்துவதற்கு அறிவுறுத்தினார். விளக்குகளுக்கான தேவை அதிகமாக இருந்தது, அவற்றை உற்பத்தி செய்வதில் கூட்டாளர்களுக்கு முதலில் பல சிரமங்கள் இருந்தன, ஆனால் அவை இறுதியில் வீடுகளிலும் கடைகளிலும் வெளிச்சத்தின் நிலையான ஆதாரமாக மாறியது. பல பின்பற்றுபவர்கள் மற்றும் மேம்படுத்துபவர்கள் புதிய மாறுபாடுகளை உருவாக்கினர். மேலும் அடுத்த தசாப்தங்களில் ஆயிரக்கணக்கான கடைகள் அவற்றைத் தயாரித்தன. இவர் புதிதாக வடிவமைத்த எண்ணெய் விளக்கு இவரது பெயரைத் தழுவி ஆர்கண்ட் விளக்கு என அழைக்கப்பட்டது. 1850ல் மண்ணெண்ணெய் விளக்கு பதிலாக ஆர்கண்ட் விளக்கு பயன்படுத்தப்பட்டது. விளக்கு கண்டுபிடிப்பு, இறுதியில், ஆர்காண்டிற்கு லாபகரமானதாக இல்லை. எண்ணெய் விளக்கின் வடிவமைப்பைப் பெருமளவு மேம்படுத்திய அய்மே ஆர்கண்ட் அக்டோபர் 14, 1803ல் தனது 53வது அகவையில், ஜெனீவாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
நெல்லையில் நோய்வாய்பட்ட யானைக்கு உரிய சிகிச்சையளிக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…
by mohan
written by mohan
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மலை பகுதியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள காட்டு யானையை குணப்படுத்தி காட்டுக்குள் விட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் கிராம மலை அடிவாரத்தில் உள்ள 80 அடி கால்வாய் அருகில் காட்டு யானை ஒன்று கடந்த ஒரு காலமாக அந்த கால்வாய் பகுதியில் கண்களில் நீர் வழிந்தபடி நிற்பதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.மேலும் அந்த யானை மற்ற யானைகளை போல் வேகமாக நடக்க முடியாமல் சோர்ந்து படுத்து விடுவதாகவும், நோய் வாய்ப்பட்ட யானை போன்று இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர்பாதிக்கப்பட்ட யானைக்கு உரிய சிகிச்சை அளித்து காட்டுக்குள் விரட்டி விட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மத்திய பாஜக அரசின் புதிய சட்டங்களை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்-சுரண்டையில் பரபரப்பு…
by mohan
written by mohan
தென்காசி மாவட்டம் சுரண்டையில் மத்திய மாநில அரசுகளின் புதிய சட்டங்களை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய மாநில அரசுகளின் புதிய வேளாண் சட்டம், மின்சார சட்டம், தேசிய கல்விக் கொள்கை, அத்தியாவசிய பொருட்கள் அவசர சட்டம், சூழலியல் தாக்க சட்டங்களை வாபஸ் பெற கோரி சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையம் முன்பு வீ.கே.புதூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்திற்கு தாலுகா தலைவர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பரமசிவன் மற்றும் நிர்வாகிகள் வேலு, சரஸ்வதி, மாரிச்செல்வம், சுடலையாண்டி, ராமமூர்த்தி, சுடர்நிலா, பூவையா, லட்சுமணன், முருகானந்தம், ராமர், சுப்பிரமணியன், அழகுதுரை, ராஜ்குமார், சுசீலா, மீனாட்சி, தனலட்சுமி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்று சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட 22 பேரை சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி கைது செய்தார்.
செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்தவர் கபீர் (வயது 35 ). இவர் இன்று காலை அண்ணாநகர் தனியார் கல்லூரி எதிர்ப்புறம் உள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி பெயிண்ட் அடிக்க சென்றார்.அப்போது அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.இதுதொடர்பாக தல்லாகுளம் தீயணைப்பு படைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து தல்லாகுளம் தீயணைப்பு படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கூலித்தொழிலாளி கபீரை மீட்டு, மதுரை அரசினர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பிஎல் தண்டா கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிபவர் குப்பன். இவர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லம்பாடி இனத்தைச் சேர்ந்த மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.அந்த ஊரில் வசித்துவரும் லம்பாடி இனத்தைச் சேர்ந்த மக்களின் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை அவர் பெயருக்கு மாற்றியும் அரசின் சொத்துக்களையும் கட்டடங்களையும் அவருடைய பெயருக்கு மாற்றி பட்டா எழுதிக் கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.ஊரில் உள்ள குடிநீர் டேங்க், போர்வெல், முதலமைச்சரின் தொலைக்காட்சி பெட்டி கட்டடம், ஏராளமான தரிசு நிலங்களை அபகரித்து வைத்துள்ளார். அவற்றில் பல ஏக்கர் நிலங்களை விற்பனை செய்துள்ளார்.முதியோரிடம் பென்சன் வாங்கி தருவதாக 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று கமிஷன், வாரிசு சான்று, இறப்பு சான்று என்று பல்வேறு சான்றுகள் வழங்குவதற்கு என லஞ்சம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். அரசு இடம், ஊர் பொது மக்களின் சொத்து, மிரட்டி பெறப்பட்ட பணம், ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.தங்களின் மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் லம்பாடி இன மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருவண்ணாமலை, அண்ணாமலையார் மலை மீது ஏறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, வனத்துறை எச்சரித்துள்ளது. திருவண்ணாமலையில், மஹா தீபம் ஏற்றும் அண்ணாமலையார் மலை, 2,668 அடி உயரம் கொண்டது. அன்று மட்டும், 2,500 பேர், மலை ஏற அனுமதிக்கப்படுவர். விழா முடிந்ததும், மலை மீது ஏற தடை விதிக்கப்படும். இருப்பினும் சிலர் தடையை மீறி, மலை மீது ஏறி, இறங்க வழி தெரியாமல் தவிப்பதும், அவர்களை தீயணைப்பு துறை, போலீசார் மற்றும் வனத்துறையினர் மீட்கும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன், மலை ஏறும் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தினர், 15க்கும் மேற்பட்டோரை, அனுமதி பெறாமல், மலை மீது அழைத்து சென்றனர். இதில் ஒருவர் மாரடைப்பால் பலியானார். இதன் எதிரொலியாக, திருவண்ணாமலை மலையில், அனுமதியின்றி ஏறினால், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கடும் நடவடிக்கை பாயும் என்றும், வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
மதுரையில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை கட்டப்பட்டு மதுரை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதே தமிழக அரசின் நோக்கம் – அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் துவரிமான் கிராமத்தில் ரூ.25 .30 லட்சம் செலவில்
குடிமராமத்து திட்டத்தின் கீழ் துவரிமான் கண்மாய் செல்லும் வரத்து கால்வாய்களை சீரமைத்து புதிய கால்வாய்கள் அமைக்கும் பணியினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பூமி பூஜை செய்து தூர் வாரும் பணியை தொடக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் திட்டத்தின் கீழ் மதுரையில் நடைபெற்று வருகிறது.இந்த துவரிமான் வரத்து கால்வாய்கள் 3 கிளை கால்வாய்கள் மூலம் சங்கமிக்கும் இடம் இது 8150 மீ தூரம் பணி அமைக்க படுகிறது கிறிதுமால் நதியுடன் இணைக்கிறோம்.மதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ 1057 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது.பல்வேறு நீர் நிலைகள் சீரமைக்கப்படுகிறது.மாடக்குளம், தென்கரை, கொடிமங்கலம் கண் மாயில் ரூ.17 கோடியில் புதிய தடுப்பணை அமைத்து நீரை தேக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம்.கண்மாய்களில் நிலத்தடி நீரை உயர்த்தி தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க தமிழக அரசு முழு வீச்சில் பாடுபடும்.கண்மாய்களில் குடிநீரை தேக்கி மக்கள் மனதில் நீங்காத பெயரை எடுத்த குடிமராமத்து நாயகன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையே சாரும் முதல்வரின் சிறந்த திட்டம் தான் இது.ஆறு, குளம்,கண்மாய்களில் கழிவு நீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அனைத்து குடும்பங்களுக்கு தாலிக்கு தங்கம், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இ.கம்யூ கட்சி ஆர்ப்பாட்டம்:
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு, வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்தல், அனைத்து குடும்பங்களுக்கும் தாலிக்கு தங்கம், கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 15.ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியூறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலாளர் குமரேசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் அலெக்ஸ், சிபிஐ மாவட்டச் செயலாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
அடுத்தவர் நிலத்தை வீடு கட்ட முயற்சித்தவர் தடுத்து நிறுத்திய உரிமையாளரை கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது.
by mohan
written by mohan
நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் பெரியகருப்பன்(65) இவருடைய மனைவிக்கு சொந்தமான இடத்தில் இதே பகுதியை சேர்ந்த குருசாமி, ஆறுமுகம், கண்ணன், செல்லப்பாண்டி ஆகியோர் கொட்டகை அமைத்து கட்டிட வேலைகள் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை தட்டிகேட்ட பெரியகருப்பன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பெரியகருப்பன் புகார் அளித்ததை தொடர்ந்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்தனர்.
செய்தியாளர் .வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன
by mohan
written by mohan
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விளாச்சேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் அப்துல் ராஜா .இவரது மனைவி பானு (வயது 22) இவர் தற்போது கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பானுவிற்கு அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு தற்போது புதிதாக கட்டி முடிக்கப்பட்டு முதல்முறையாக பானுவிற்கு பிரசவ அறுவை சிகிச்சை செய்ததில் பெண் குழந்தைகள் பிறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் செல்வராஜ் மற்றும் அறுவை சிகிட்சை நிபுணர் Dr.சக்தி, மயக்கவியல் நிபுணர் பாக்கிய லெட்சுமி, குழந்தை நலவியல் நிபுணர் பக்ரூதின் ஆகியோர் பிறந்த குழந்தைகளை தந்தை அப்துல் ராஜாவிடம் வழங்கினர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் தேசியா வயது 18. இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த ஆண்டி மகன் பாலமுருகன் வயது 22. இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் ஏற்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இரு குடும்பத்தாரும் பேசி திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் நேற்று ( 12.10.2020 ) காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தேசியா வீட்டில் உள்ள பேன் கொக்கியில் சேலையை மாற்றி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் ராஜலட்சுமி விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரசோலையிடம் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். திருமணமாகி 5 மாதம் என்பதால் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் உஷா தலைமையிலும் ,நிலக்கோட்டை தாசில்தார் யூஜின் முன்னிலையிலும் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணமாகி 5 மாதத்தில் இளம்பெண் இறந்தது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
You must be logged in to post a comment.